இரண்டொரு நாளில் எம் பணியை உற்சாகத்துடன் தொடர்வேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

இரண்டொரு நாளில் எம் பணியை உற்சாகத்துடன் தொடர்வேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஜூன் 21- லேசான காய்ச்சல் கார ணமாக ஓய்வில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.6.2022) மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

”சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் - தட்பவெப்ப மாற்றம் ஆகிய வற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் கார ணமாக, ராணிப் பேட்டை மாவட்டத் திலும், திருப்பத்தூர், வேலூர் மாவட் டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக் கின்றன. இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு அரசின் செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது. 

நலமாக இருக்கிறேன்

இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற் குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய் வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப் போதும் போல பணியினைத் தொடர்ந் திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன்.

சரியாகச் சொல்வதென்றால், ஓய்வி லும் அத்தியாவசியப் பணிகளை மேற் கொண்டுதான் வருகிறேன். 

அப்படிப்பட்ட நிலையில், நேற்றிரவு சென்னையில் பெய்த திடீர் மழையால், எந்த இடத்திலாவது தண்ணீர் தேங்கி யுள்ளதா, வடிகால் அமைப்பு பணிகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து அதிகாலையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசித்து விவ ரங்களைத் தெரிந்து கொண்டேன். ஒரு சில இடங்களில், வடிகால் கட்டமைப் புப் பணிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டிய சூழல் இருப்பதையும், அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டு, அவற்றை விரைந்து முடிக்குமாறு பணித்துள்ளேன்.

மக்களின் தேவைகளை, அவர் களுக்கான வசதிகளை நிறைவேற்ற வேண்டிய முதலமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்துள்ள நிலையில், அந்தப் பொறுப்பை வழங்கியது, கழகம் எனும் பேரியக்கத்தின் வெற்றிதான் என்பதை நான் ஒரு நொடிப் பொழுதும் மறந்ததில்லை. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்பில் கிடைத்த வெற் றியால், கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பைத் தோளில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான் முதல மைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன். கழகக் கட்டமைப்பு வலிவோடும் பொலி வோடும் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து நாம் பணியாற் றிட முடியும்.

ஜனநாயக வேர்

உட்கட்சி ஜனநாயகமே ஓர் இயக் கத்தின் வேர்களைப் பலப்படுத்தும். இந்தியாவில் உட்கட்சி ஜனநாயகத்தில் பலமிக்க அரசியல் கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய அளவிலான அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்று, நிர்வாகிகள் தேர்வு பெற்று வருகின்றனர். பெரும் பாலான ஒன்றியங்களில் தேர்தல் நிறை வடைந்துள்ளது. பெரும்பாலும் அமை தியாகவும் இணக்கமாகவும் நடைபெற் றுள்ளது என்பது உங்களுக்கும், உங் களில் ஒருவனான எனக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் செய்தியாகும்.

ஓர் இயக்கத்திற்கு உட்கட்சி ஜன நாயகம்தான் அடித்தளம் என்றால், ஒரு நாட்டிற்கு உள்ளாட்சி ஜனநாயகமே ஆணிவேராகும். தமிழ்நாட்டில் திரா விட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு அமையும்போதெல்லாம் மாநகரங்கள் முதல் கிராமங்கள்வரை உள்ளாட்சி ஜனநாயகம் பலப்படுத் தப்படுவது வழக்கமான ஒன்று.

உறுதியோடு இருக்கிறேன்

சென்னை மாநகராட்சியின் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்ற உங்களில் ஒருவனான எனக்கு உள் ளாட்சி நிர்வாகத்தின் முக்கியத்துவம் முழுமையாகத் தெரியும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அய்ந்தாவது முறை யாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றபோது, உள்ளாட் சித்துறை அமைச்சராகும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். இன்று முதல மைச்சர் என்ற பொறுப்பில் அமர்ந்து, மாநிலத்தின் நலனுக்காகவும் உரிமைக் காகவும் பாடுபடும் அதேநேரத்தில், உள்ளாட்சி ஜனநாயகம் தழைப்ப தற்கான பணிகளை மேற்கொள்வதிலும் உறுதியோடு இருக்கிறேன்.

கழக ஆட்சியில் நடைபெற்ற நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து நிலைகளிலும் தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் ஏறத்தாழ 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட அளவில் வெற்றியைப் பெற்றுள்ளன. கழகத்தின் சார்பில் பொறுப்பேற்றுள்ள, ‘நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு’ வரும் ஜூலை 3-ஆம் நாளன்று நாமக் கல்லில், ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் நடைபெற இருக் கிறது. 

அதிகாரமளித்தவர்

உள்ளாட்சி அமைப்புகளில் முதன் முதலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அவர்களுக்கு ஆட்சித் திறனுக்கான அதிகாரமளித் தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நடைபெறும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்பதை நிரூபித்திருக்கிறது. நாமக்கல்லில் நடை பெறும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் சரிபாதி அளவி லும், ஏன் அதற்குச் சற்று கூடுதலான அளவிலும் பெண் பிரதிநிதிகள் பங் கேற்கவிருக்கிறார்கள். வீட்டைக் காப் பதுபோல நாட்டைக் காக்கும் திறன் மிக்க மகளிருக்கு நிர்வாகப் பயிற்சிக் களமாக இந்த மாநாடு அமையவிருக் கிறது.

முனைப்பாக இருக்கிறேன்

‘அனைவருக்கும் அனைத்தும்’ என் கிற திராவிட மாடலின் அடிப்படையில், அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்திட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். குக்கிராமத்தில் தொடங்கி தலைநகரம் வரை உள்ளாட்சியில் நல் லாட்சி திறம்பட நடைபெற்றால்தான் ஒட்டுமொத்த மாநிலத்தின் கட்டமைப் பும் வளர்ச்சியும் சிறப்பாக அமையும். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே நமது இலக்கு. அதனால்தான், ஓய் வெடுக்க வேண்டி மருத்துவர்கள் அறி வுறுத்தியுள்ள நாளிலும், ஓய்வின்றி சிந் தித்து, அதனைச் செயல்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, இலக்கை அடை வதில் முனைப்பாக இருக்கிறேன்.

இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கழகச் செயல் பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந் திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய் வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. உடன்பிறப்புகளாம் உங்களுடைய பேரன்பின் பலம் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடு கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment