உசிலம்பட்டி அமைதிப் புரட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

உசிலம்பட்டி அமைதிப் புரட்சி!

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்த மாணவர் தோழர் ஆனந்த், சென்னை பெரியார் திடலில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவருடைய திருமணத்தை கடந்த 9 ஆம் தேதி, உசிலம்பட்டியில் நான் தலைமை தாங்கி நடத்தி வைத்தேன்.

அந்தப் பகுதியில் பெண் குழந்தை பிறந்தால், தாய்ப்பாலுக்குப் பதிலாக கள்ளிப்பால் ஊற்றி மரணிக்கச் செய்வர். மணப்பெண்  யுவேதா எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்.

பழைய வழக்கப்படி கள்ளிப்பால் ஊற்றியிருந் தால், ஒரு பெண் எம்.பி.பி.எஸ். டாக்டர் கிடைத் திருப்பாரா?

இந்த மாற்றம் எப்படி வந்தது?

தந்தை பெரியார் உழைப்பால், திராவிடர் கழகப் பிரச்சாரத்தால், ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஏற்பட்ட சமூகப் புரட்சியல்லவா இது! இதற்குப் பெயர்தான் திராவிட பார்மூலா என்பது.

இன்றைக்கு மாநிலத்தில்  ஆட்சியில் இருக் கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பல்வேறு மறு மலர்ச்சித் திட்டங்களை நாளும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

- திருச்சியில் நடைபெற்ற (12.6.2022) மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் 

கழகத் தலைவர் ஆற்றிய முன்னுரையிலிருந்து...


No comments:

Post a Comment