ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்னாயிற்று? வேலையில்லாத வாலிபர்களைப் பன்னாட்டு மாஃபியா கும்பல் பயன்படுத்துகிறது இவற்றை ஒழிப்பதில் முன்னுரிமை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்னாயிற்று? வேலையில்லாத வாலிபர்களைப் பன்னாட்டு மாஃபியா கும்பல் பயன்படுத்துகிறது இவற்றை ஒழிப்பதில் முன்னுரிமை தேவை

குற்றாலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

குற்றாலம், ஜூன் 12 ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்னாயிற்று? வேலையில்லாத வாலிபர்களைப் பன்னாட்டு மாஃபியா கும்பல் பயன் படுத்துகிறது. இவற்றை ஒழிப்பதில் முன்னுரிமை தேவை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க குற்றாலம் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (11.6.2022) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

42 ஆண்டுகாலமாக குற்றாலத்தில் 

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

குற்றாலத்தில் கடந்த 42 ஆண்டுகளாக - ஒரு சில ஆண்டுகள்   தவிர - தொடர்ந்து பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 43 ஆவது ஆண்டாக, ஏறத்தாழ 120 இருபால் மாணவர்கள் கலந்துகொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கழகப் பொறுப்பாளர்கள், ஆர்வலர்கள், நண்பர்கள் 200 பேருக்கும்மேல் கலந்துகொண்டு இருக்கக்கூடிய ஓர் அருமையான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கரோனா தொற்று காலகட்டம் என்பதால், இரண்டு ஆண்டுகளாக இம்முகாம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஏனென்றால், ஊரடங்கு காரணமாக.

இந்த ஆண்டு சிறப்பான வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏராளமான இளைஞர்கள் பெரியாரியலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்கள்

திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற இந்தக் காலகட்டத்தில், அதனுடைய அடிப்படை தத்துவமான பெரியாரியம் மிக முக்கியமானது என்பதால், ஆங்காங்கு ஏராளமான இளைஞர்கள் பெரி யாரியலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்கள்.

திராவிட மாடல் ஆட்சியின் கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 கோடி ரூபாயை ஒதுக்கி, 21 மொழி களில் பெரியார் என்று உலக மொழிகள் உள்பட பெரி யாருடைய கருத்தியலை, கொள்கைகளை, அந்தந்த மொழிகளிலே மொழியாக்கம் செய்து - இந்திய மொழிகளிலும் சரி, உலக மொழிகளிலும் சிறப்பாக அதைச் செய்து பரப்பக்கூடிய ஒரு நல்ல திட்டத்தை அறிவித்துள்ளனர்.

எனவே, இந்தக் காலகட்டத்தில் பெரியாரியல் என்றால் என்ன என்பதை இளைஞர்கள் குறிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அது ஏதோ ஒரு கொள்கைக்காக அல்லது இயக்கத்திற்காக என்பதைத் தாண்டி, பெரியாரியல் மக் களுக்கான வாழ்வியல், சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், எல்லோருக்கும் எல்லாமும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்; இவை அத்தனையும் இருக்கக்கூடிய வாய்ப்பு என்பதினால், அது அவர்களுக்குப் பயன்படும் என்ற முறையில், நாடு தழுவிய அளவில் நாங்கள் நடத்தினாலும், இந்தக் குற்றாலம்  ஒரு முத்திரை பதித்த ஒரு நிகழ்வாக இருக்கிற காரணத்தால், இன்றைக்கு பக்குவப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்.

அதிலே பொறியாளர்கள், பட்டதாரிகளாக இருக்கக் கூடிய நண்பர்கள், தகவல் தொழில்நுட்பப் படிப்புப் படித்தவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தேன்.

திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டங்கள்

திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு நாள்கள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் பெரியகுளம், சுரண்டை யில் சிறப்பான வகையில் நடைபெற்றது.

பயிற்சிப் பட்டறை இன்று  நிறைவு பெறுகிறது. திரும் பிச் செல்கையில்,  இராஜபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய மகிழ்ச்சி.

மறைந்தும், மறையாமல் எப்பொழுதும் நம் நெஞ் சங்களில் நிறைந்திருக்கின்ற வீகேயென் அவர்களு டைய மாளிகையில்தான் பல ஆண்டுகளாக பெரி யாரியல் பயிற்சி பட்டறை நடைபெறும். இந்த ஆண்டும் அவருடைய மாளிகையில்தான் நடைபெறுகிறது.

அவர் உருவமாக இல்லாவிட்டாலும், அவருடைய பிள்ளைகள் ராஜா போன்றோர் சிறப்பாக உதவு கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் தோழர் ராஜாராம் போன்றவர்கள் எங்களுக்கு உறு துணையாக இருக்கிறார்கள்.

கட்சி வேறுபாடில்லாமல், எல்லோரும் பெரியாரி யலை இன்று  ஏற்றுக்கொண்டு தோழர்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பதும், பொதுமக்கள் ஆதரவு கொடுப் பதும் வரவேற்கத்தகுந்தது.

ஆகவே, உங்களையெல்லாம் இந்த வாய்ப்பில் சந்திப்பதில் பெரிய மகிழ்ச்சி.

மதவெறுப்பு இன்றைக்கு உலகளவில் 

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

செய்தியாளர்: பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் மத வெறுப்பு பேச்சை பேசியிருப்பது குறித்து...?

தமிழர் தலைவர்: அவர்கள் பேசுவது இது முதல் முறையல்ல;  30 ஆவது முறையாக அவர்கள் பேசுகி றார்கள். அதேநேரத்தில், இது உலகளாவிய அளவிற்குப் போய்ச் சேர்ந்ததினால், உலகளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

பேசுபவர்கள் வெறும் கருவிகள்தான். அவர்கள் வெறும் அம்புகள்தான்.

இவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதனுடைய தலைவர் கோல்வால்கர் சொன்னவைதான் - அதற்கு ஆதாரம் 'ஞானகங்கை' என்று அவர் எழுதிய புத்தகம்தான்.

இந்தியாவினுடைய எதிரிகள் யார்? யார்? என்றால்,

முதல் எதிரி முஸ்லீம்

இரண்டாவது எதிரி கிறிஸ்துவர்

மூன்றாவது எதிரி கம்யூனிஸ்டுகள் என்று பட்டியல் போட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

காந்தியாரைக் கொன்ற கோட்சேவை மிகப்பெரிய தியாகியாக, பிரயாக்சிங் என்ற பா.ஜ.க. உறுப்பினர், நாடாளுமன்றத்தில், பிரதமரை வைத்துக்கொண்டு பேசு கிறார். இதுவரையில் அவர்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. இதுபோன்று எல்லா இடங்களிலும் நடக் கிறார்கள்.

இன்றைக்கு அது உலகளாவிய அளவுக்குச் சென்றவுடன், அதனுடைய தாக்கம் என்ன என்று சொல்லுகின்ற நேரத்தில், இதுகுறித்து அறிக்கையை 'விடுதலை'யில் தெளிவாக மூன்று நாள்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

ஆங்கில நாளிதழ்களான 'இந்து', 'நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்', 'டைம்ஸ் ஆஃப் இண்டியா' போன்ற நாளேடுகள் புள்ளி விவரங்களோடு செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

இஸ்லாமிய நாடுகள் கண்டித்திருக்கின்றன

வெறுப்புப் பிரச்சாரத்தினுடைய விளைவுகள், நம்மு டைய பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு, வளைகுடா நாடுகளில், 52 இஸ்லாமிய நாடுகள் இதனைக் கண்டித்திருக்கின்றன.

அதனுடைய விளைவு என்னாகும் என்றால், அங்கே இருந்துதான் பெட்ரோலை இறக்குமதி செய் கிறோம். நம்முடைய ஏற்றுமதியில் 18 சதவிகிதம் அந்நாடுகளின் பங்கு இருக்கிறது.

இஸ்லாமிய நாடுகளுடைய எரிச்சலுக்கும், கோபத் திற்கும் ஆளானால், இவை தடைபடுகின்ற நிலைமை ஏற்படும்.

அதுபோன்று நடந்த பா.ஜ.க. பிரமுகர்மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்; பிரதமரோ, அந்தக் கட்சித் தலைவரோ கண்டித்திருக்கிறார்களா?

ஆகவேதான், மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

சமூக நல்லிணக்கம் என்பது சமுதாயத்திற்கு மிக முக்கியமானது.

'திராவிட மாடல்' குறித்து இப்பொழுதுதான் வகுப் பெடுத்தேன். திராவிட மாடலில், சமூக நல்லிணக்கம் மிக முக்கியமானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அமைதிப் பூங்காவான மாநிலமாகும்.

திராவிடர் கழகத்துக்காரர்கள் 

எல்லா மதத்தவர்களுக்கும் நண்பர்கள்

இன்னுங்கேட்டால், எந்த மதத்திற்கும் நாங்கள் உடன்படாதவர்களாக இருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கள், திராவிடர் கழகத்துக்காரர்கள் எல்லா மதத்தவர் களுக்கும் நண்பர்கள்.

இதுவரை எந்தவிதமான மதக்கலவரமோ, ஜாதிக் கலவரமோ இங்கு ஏற்படுவதில்லை. காரணம், அமைதிப்பூங்கா மாநிலமாகும் தமிழ்நாடு.

மற்ற மாநிலங்களில் இந்த நிலைமை இல்லை. ஏனென்று கேட்டால், பக்கத்தில் உள்ள மாநிலமான கருநாடகத்தில், பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அங்கே சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எந்தவிதமான பாது காப்பும் இல்லை.

அதேபோன்று, அங்கே அவர்கள் விரும்புகின்ற உணவை உண்ண முடியவில்லை. தமிழ்நாட்டில்தான், விரும்புகின்ற உணவை உண்ணுகிறார்கள்; விரும்புகிற இடத்திற்குச் செல்லுகிறார்கள். விரும்புகிற அத்துணை பேரோடும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

இதனுடைய தனிச்சிறப்பு 'திராவிட மாடல்'.

அதற்கு நேர் எதிரானவை ஆர்.எஸ்.எஸ்., ஆரியக் கொள்கைகள். அதனை நடைமுறைப்படுத்துவது அதனுடைய அரசியல் வடிவமான பா.ஜ.க.தான்.

ஆகவே அவர்கள் இங்கே வந்து, வெளி யில் தெரியாமல் சிறுசிறு செயல்களை செய்துகொண்டி ருந்தார்கள். இன்றைக்கு அது பளிச்சென்று தெரிகிறது.

தனி மனித அம்பை - தனி  நபரை கைது செய் கிறார்கள், கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பதெல் லாம் ஒரு கண்துடைப்புதான்.

தூண்டியவர்களை விட்டுவிட்டு...

முதலில் அம்பை தண்டிக்கக்கூடாது; கொலை செய்ப வரைக்கூட, துப்பாக்கியை யாரும் தண்டிப்பதில்லை. அதைப் பிடித்த கை யாருடையது? அதனைத் தூண்டியவர்கள் யார்? என்பதுதான் முக்கியம்.

ஆகவே, தூண்டியவர்களை விட்டுவிட்டு, அவர் களின் சொல்லைக் கேட்டு ஆடியவர்களைப் பிடிப்பது சரியல்ல.

''பேய் பிடித்தவனை அடிப்பது பயனில்லை  - பேய் என்ற ஒன்று இருந்தால், அதனை விரட்டவேண்டும்'' என்கிற எண்ணம்தான் வரவேண்டும்.

ஆதீனத்தினுடைய மரியாதையைக் காப்பாற்றியதே திராவிடர் இயக்கம்தான்!

செய்தியாளர்: மதுரை ஆதீனம் தமிழ்நாடு அரசைப் பற்றி குறை கூறியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: சிலரை நாங்கள் பொருட்படுத்து வதில்லை. அவர் விபத்தினால் வந்தவர். ஆகவேதான், அவருக்கு வரலாறு முழுவதும் தெரியாது.

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் வரலாறு அவருக்குத் தெரியாது.

அந்த ஆதீனத்தினுடைய மரியாதையைக் காப்பாற்றியதே திராவிடர் இயக்கம்தான்.

திராவிடர் இயக்கங்கள் இல்லையென்றால், ஆதீ னமே இருக்க முடியாது. காரணம் என்னவென்றால், உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு ஒன்று இருக்கிறது.

சூத்திரர்கள் ஒருபோதும் சன்னியாசி ஆகக்கூடாது.

இவர்கள் துறவிகள் என்று சொல்வதில் அர்த்த மில்லை. இவர்களைத் துறவிகளாக சட்டம் அங்கீகரிக்க வில்லை. இந்து லா அதனை அங்கீகரிக்கவில்லை.

இவர்களுக்கு நாம் மரியாதை காட்டியிருக்கிறோம். காரணம் என்னவென்றால், அதிலும், தவத்திரு குன்றக் குடி அடிகளார் போன்று, பொன்னம்பல அடிகளார் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

இவரைப் போன்று (மதுரை ஆதீனம்) இருக்கின்ற வர்களும் இருக்கிறார்கள்.

ஏனென்றால், இவர்கள் எல்லாம் யானை திடீ ரென்று, கழுத்தில்  மாலை போட்டதால் வந்தவர்கள் என்பார்களே, அதைப் போன்றவர்கள். திராவிட இயக்கப் பணியின் விளைவு என்ன என்பது தெரியாது.

இந்த ஆதீனத்தையேகூட திராவிடர் இயக்கங் கள்தான் காப்பாற்றியது- சில மாதங்களுக்கு முன்பாக.

கைலாச சாமியார் நித்தியானந்தாவிடம், மதுரை ஆதீனம் என்ன பாடுபட்டது என்பதை அவர் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொண்டால், தானாகவே அவருடைய நாக்கு உள்ளே போய்விடும்.

முதலில் விலைவாசி பட்டியலைப் பார்க்கட்டும்

செய்தியாளர்:  பா.ஜ.க. அண்ணாமலை ஊழல் பட்டியல் என்று அறிவித்து இருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர் தனித்தனியாக ஒன்றைத் தயார் செய்து கொண்டே இருக்கிறார். ஊழல் பட்டி யலைவிட, அவர் முதலில் விலைவாசி பட்டியலைப் பார்க்கட்டும்.

ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று விழும் என்று சொன் னார்களே, அப்படி விழுந்ததா? என்று முதலில் சொல்லட்டும்.

அதைவிட, சப்கா சாத், சப்கா விகாசில் என்னென்ன செய்தார்கள் என்பதை எடுத்துச் சொல்லட்டும்.

ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று சொன்னார்களே, அதை செய்தார்களா? என்பதைச் சொல்லிவிட்டு, பிறகு ஊழலுக்கு வரட்டும்.

ஊழல் பட்டியலைவிட, அவர் அவசியம் பார்க்க வேண்டியது விலைவாசிப் பட்டியல்.

வேலை கிட்டியவர்களுடைய பட்டியலைத் தேடிப் பார்க்கட்டும்; பிறகு தமிழ்நாட்டில் அவர்கள் காலூன்றுவதைப்பற்றி யோசிக்கலாம்.

ஆகவேதான், தமிழ்நாட்டில் காலூன்றுவதற்குப் பா.ஜ.க. ஆசைப்படுவதில் தவறில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படலாம்.

அதுமட்டுமல்ல, அப்துல்கலாம் சொன்னதை இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

தூங்காமலேயே கனவு காண்கிறார்கள்

''கனவு காணுங்கள், கனவு காணுங்கள்'' என்று அவர் சொன்னார். இவர் பகலிலேயே கனவு காணுகிறார்கள்; தூங்காமலேயே கனவு காண்கிறார்கள்.

ஆகவேதான், கனவு காண்கின்ற உரிமை அவருக்கு உண்டு. கட்சியை வளர்ப்பது அவருடைய கடமையாக நினைக்கலாம்.

ஆனால், ஒன்றே ஒன்று - திராவிட இயக்கம் இல்லையென்றால், கிராமத்தில், சாதாரண நிலையில் உள்ளவர்கள் அய்.பி.எஸ். அதிகாரியாக ஆகியிருக்க முடியாது.

திராவிட இயக்கம், வகுப்புவாரி உரிமை, சமூகநீதி வந்ததினால்தான், எங்களைப் போன்றவர்கள் வழக் குரைஞர்களாக ஆகியிருக்கிறோம்; அவரைப் போன்ற வர்களுக்குப் பின்னால் அய்.பி.எஸ். என்கிற பட்டம் வந்திருக்கிறது. இதுவே திராவிட இயக்க சாதனை.

ஆரம்பத்தில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வே இருந்தி ருந்தால், இந்த நாட்டில் குலக்கல்வித் திட்டத்தைத் தவிர வேறு இருக்காது.

அதற்கு ஆதாரம் வேண்டும் என்றால், இப்போது இருக்கிற ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையே போதுமானது.

ஒன்றிய அரசோடு தமிழ்நாடு அரசு 

இணக்கமாகப் போகவேண்டுமாம்

செய்தியாளர்: ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ். ஆகியோர், ஒன்றிய அரசோடு தமிழ்நாடு அரசு இணக்கமாகப் போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே - ஒன்றிய அரசோடு இணக்கமாக இருந்தால், நம் மாநிலத்திற்கு எல்லாவித சலுகைகளும் கிடைக்குமா?

தமிழர் தலைவர்: இந்திய அரசமைப்புச் சட்டத்தை சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், இதுபோன்று சொல்லமாட்டார்கள். பன்மொழி, பல கலாச்சாரம், பல கட்சிகள், பல்வேறு பண்பாடுகள் இவையெல்லாம் இருப்பதுதான் இந்திய நாடு.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்திய நாடு.

எதிர்க்கட்சிகளையும் சமமாக மதிப்பதுதான் ஜனநாயகம்.

ஒரு கூட்டாட்சியில், ஒரு கட்சி ஆட்சி இருக்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஆகவே, அந்தத் தத்துவத்தையே புரிந்துகொள் ளாமல், அவர்களுடைய கட்சித் தலைமை எப்படி இருந்தது என்பதையும் மறந்துவிட்டார்கள்.

ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது, ''லேடியா? மோடியா?'' என்று கேட்டார்.

அதை மறந்துவிட்டு இவர்கள், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். - ஓ.எஸ். - எல்லாவற்றிலும் எஸ்.எஸ். எஸ்.தான். காரணம் என்னவென்றால், மடியில் கனம், வழியில் பயம் அவ்வளவுதான்.

எது உண்மை என்று அவர்கள் சொல்லட்டும்!

செய்தியாளர்: அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங் களையெல்லாம் இன்றைய ஆட்சி நிறுத்திவிட்டதே என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அவர்கள் சொல்வதிலே முரண் பாடு இருக்கிறது. அவர்கள் சொன்ன பதிலிலிருந்தே நான் சொல்கிறேன்.

சில நாள்களுக்கு முன்பு அவர்கள் என்ன சொன் னார்கள் தெரியுமா?

நாங்கள் கொண்டு வந்த திட்டம்தான் - அதன்மீது தி.மு.க. லேபிள் ஒட்டுகிறது; ஸ்டாலின் லேபிள் ஒட்டி விட்டார் என்று சொன்னார்கள்.

அது உண்மையா? இது உண்மையா? என்று தயவு செய்து அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்.

பல ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை ஓராண்டில் செய்திருக்கிறார்!

செய்தியாளர்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு ஆகியும் இதையெல்லாம் செய்யவில்லை என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: ஓராண்டில், பல ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

பெரியார் காலத்தில் எப்படி கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்றவுடன், அரசமைப்புச் சட்டம் முதல் திருத்தம் வந்தவுடன், எல்லோருக்கும் பயன் கிடைத்தது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் பெரியார் போராடியதால் பயன்கிடைத்தது.

அதேபோன்று இப்பொழுது, பிற்படுத்தப்பட்டோர் முதுநிலை மருத்துவர்களாவதற்கு 27 சதவிகித ஒதுக்கீடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு -  பல ஆண்டுகளில் செய்ய முடியாத காரியத்தை கல்வித் துறையில், வேலை வாய்ப்புத் துறையில், தொழில் முதலீட்டுத் துறையில் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.

கலைஞர் தொடங்கிய 

பெரியார் நினைவு சமத்துவபுரம்

ஜாதி ஒழிப்புத் தத்துவத்தை எடுத்துக்கொண்டால், கலைஞர் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவ புரத்தைத் தொடங்கினார். கலைஞர் செய்தார் என்பதி னால், அந்த சமத்துவபுரங்களை சீரமைக்காமல் வைத்தி ருந்தது கடந்த கால ஆட்சி.

இன்றைக்கு ஜாதிக் கலவரங்கள் கிடையாது, மதக் கலவரங்கள் கிடையாது. சிறுபான்மை மக்கள், பெரும் பான்மை மக்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல், அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இவை அத்தனையும் இந்த ஆட்சியினுடைய மணிமகுடத்தின்  முத்துகள்.

அதைத்தாண்டி, 'திராவிட மாடல்' ஆட்சியை குறை சொல்கிறார்களே, தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்கும்பொழுது, அரசு கஜானா காலியாக இருந்தது.

மிகப்பெரிய அளவிற்கு கரோனா தொற்று சவால். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏழு மாதங்கள்வரை கரோனா தடுப்பு நடவடிக்கைகள்தான். கரோனா பல ரூபத்தில் வருகிறது - எப்படி காவி பல ரூபத்தில் வருகிறதோ, அதுபோல, கரோனா, டெல்டா வேரியேசன், ஒமைக்ரான் போன்று வந்தது. அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தடுப்பூசியைப் பொதுமக்களுக்கு அளிக்கின்ற பணிகளை செய்தார்கள்.

இந்த நெருக்கடியில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியை தரமாட்டேன் என்கிறது.

பழைய காலத்து ராஜாக்கள் ஆட்சியில்லை, 

மக்களாட்சி!

முதலமைச்சர் கேட்பதற்கு உரிமை படைத்தவர். அப்படி அவர் கேட்டால், அய்யய்யோ பிரதமரை கோபப்படுத்திவிட்டாரே? என்று சொல்கிறார்கள்

இது பழைய காலத்து ராஜாக்கள் ஆட்சியில்லை, மக்கள் ஆட்சி. ஒரு பிரதமர்முன், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதமர் முன், நம்முடைய வரிப் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்; நிலுவைத் தொகையை எங்களுக்குக் கொடுங்கள் என்று ஒரு முதலமைச்சர் கேட்டால், 

அய்யய்யோ, அவர் முன் இவர் கேள்வி கேட்டு விட்டார் என்று சொல்வது எவ்வளவு அறியாமை!

நாம்   எவ்வளவு   அறியாமையில்   இருக்கிறோம், 

No comments:

Post a Comment