சர்.சி.பி. என்ன சொல்லுகிறார்?
இந்தி தோன்றிய வரலாறு
''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத
மொழி இந்தி'' - சர்.சி.பி.
சென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி அய்யர் இந்தியின் தகுதியின்மையை விளக்கிப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
‘மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்த சிப்பாய்கள் ஒரே பாசறையில் வசித்து வந்தனர். அப்பொழுது அவர்கள் தாம் பேசு வதற்கு வசதியாக அரபிக், பாரசீகம், சமஸ் கிருதம், வட்டார மொழி ஆகியவற்றிலிருந்து ஒரு புது மொழியை உண்டாக்கினர்; அதுதான் 'இந்தி' மொழி என வழக்கில் வந்துள்ளது.'
‘சமஸ்கிருதம், லத்தீன், கிரீக், இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு, அரபிக் போன்ற மொழிகளைப் போல இந்தி வளர்ச்சியடைந்த மொழியல்ல என்பது தெளிவு.'
‘இந்தி முதலில் தன்னை வளப்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னும் இந்தி மொழி சொல் வளமின்றி வறுமையில் வாடுகிறது.'
‘எனக்கு இந்தி தெரியும், ஆச்சாரியார் அவர்களுக்கும் இந்தி தெரியும். அப்துல்கலாம் ஆசாதுக்கு இந்தி தெரியும். ஆனால், ஆசாத் பேசும் இந்தி எனக்கும், ராஜாஜிக்கும் புரியாது; ஆசாத் தனது இந்தியில் பாரசீக வார்த்தைகளை அதிகம் சேர்க்கிறார். நானும், ராஜாஜியும் பேசும் இந்தியில் சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் சேர்த்து அதைப் பேசுவோம் மற்றும் வேறு விதமாகவும் பலர் பேசும் இந்தியும் இருக்கிறது. சென்ற நவம்பர் 18 ஆம் தேதி பார்லிமெண்டில் ஒரு ரசமான சம்பவம் நடைபெற்றது. அனூர் சந்த் என்பவர் பல உப கேள்விகளைக் கேட்டார். உதவியமைச்சர் திருமதி லட்சுமி மேனன் தனக்குக் கேள்விகள் புரியவில்லை என்று சொன்னார்; பிரதமர் நேரு எழுந்து தனக்கும் அந்தக் கேள்விகள் புரியவில்லை என்று கூறினார்.
எனக்கும், ராஜாஜிக்கும் ஆசாத்தின் இந்தி தெரியாது; திருமதி லட்சுமிமேனனுக்கும், நேருவுக்கும் அனூர்சந்தின் இந்தி புரியவில்லை. மற்றும் காசி சர்வகலாசாலையில் எனக்கு ஏற் பட்ட அனுபவத்தில் தெரிந்துகொண்டது. பீகார் மாணவர்கள் பேசிய இந்தியை உத்தரப்பிரதேச மாணவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே.''
No comments:
Post a Comment