சென்னை, ஜூன் 1 தமிழ்நாட்டில் 639 லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
லெவல் கிராசிங்குகளில் விபத்துக்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி, சாலை, ரயில் போக்குவரத்தை சீராக இயக்க, ரயில்வே லெவல் கிராசிங் கேட்களை நீக்கிவருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில், 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டு காலத்தில் மொத்தம் 639 ஆளில்லா லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளன.
அதேபோல் 2014 முதல் 262 ஆட்களையுடைய லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 100% ஆளில்லா லெவல் கிராசிங் கேட்கள் நீக்கப் பட்டுள்ளன.
அதேபோல் பணியாட்களை கொண்டுள்ள லெவல் கிராசிங் கேட்கள் ரயில்வேயால் படிப்படியாக அகற்றப் பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment