தமிழ்நாட்டில் 639 லெவல் கிராசிங் கதவுகள் அகற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

தமிழ்நாட்டில் 639 லெவல் கிராசிங் கதவுகள் அகற்றம்

சென்னை, ஜூன் 1  தமிழ்நாட்டில் 639 லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே 

தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: 

லெவல் கிராசிங்குகளில் விபத்துக்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி, சாலை, ரயில் போக்குவரத்தை சீராக இயக்க, ரயில்வே லெவல் கிராசிங் கேட்களை நீக்கிவருகிறது. 

அதன்படி தமிழ்நாட்டில், 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டு காலத்தில் மொத்தம் 639 ஆளில்லா லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளன. 

அதேபோல் 2014 முதல் 262 ஆட்களையுடைய லெவல் கிராசிங் கேட்கள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 100% ஆளில்லா லெவல் கிராசிங் கேட்கள் நீக்கப் பட்டுள்ளன. 

அதேபோல் பணியாட்களை கொண்டுள்ள லெவல் கிராசிங் கேட்கள் ரயில்வேயால் படிப்படியாக அகற்றப் பட்டு வருகின்றன.


No comments:

Post a Comment