தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கடலூர் அருகில் உள்ள சில கிராமத்துப் பிள்ளை கள் கெடிலம் நதியில் குளித்து, நீந்தி விளையாடச் சென்று, ஆழத்தில் புதைந்து 7 இளம் பிள்ளைகள் - வளர்ந்து வாழவேண்டிய, அவர்களின் தாய் - தந்தையர்களின் எதிர்கால ஆசைக் கனவுகளைப் பறித்துவிட்டது போன்று - சாவின் மடியில் விழுந்தார்கள் என்ற செய்தி, படிப்போர், கேட்போர் எவரையும் கண்ணீர் கடலுக்குள் தள்ளும் மாளாத் துயரச் செய்தியாகும்!
அக்குடும்பத்தவர்களுக்கு நமது மிகுந்த ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலா 5 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதி அளிப்பதாகக் கூறி யுள்ள அறிவிப்பு மிகவும் முக்கியம்.
ஆறு, குளம், ஏரி, கடல் அருகே குளிக்கச் செல்பவர்களுக்குத் தக்க எச்சரிக்கைப் பலகை - போதிய பாதுகாப்பு - கண்காணிப்பையும் ஏற்பாடு களையும் செய்யவேண்டும்.
அந்த ஏற்பாடுகள் - இனிமேல் இப்படிப்பட்ட துயர அதிர்ச்சி நிகழ்வுகள் ஏற்படாது தடுக்கப் பெரிதும் உதவிடும் என்பது மிகவும் முக்கியமாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.6.2022
No comments:
Post a Comment