சென்னை, ஜூன் 1 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்துக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்கரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படாத வகையில் வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இடையே 3 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டது.
அதன்படி நடைபெற்ற தேர்வில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வேதியியல் வினாத்தாளில் சில குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கூடுதல் மதிப் பெண்கள் வழங்க தேர்வுகள் இயக்ககம் முடி வெடுத்துள்ளது.
அதன்படி அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: வேதியியல் பாட வினாத்தாள்களில் பகுதி-மி வகை-அ வினா எண் 9 (அல்லது வகை-ஆ வினா எண் 5 மற்றும் பகுதி- 2 வினா எண் 29 ஆகியவற்றிற்கு தேர்வர்கள் அவ்வினாவிற்கான விடையினை எழுத முயற்சி செய்திருப்பின் அதற்கு முழுமையான மதிப்பெண் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment