சிதம்பரம், மே 19 சிதம்பரம் கோயிலில் கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் கனகசபை எனும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வதற்கு கடந்த இரு ஆண்டுகளாக தடை இருந்து வந்தது. பின்னர் அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்ட நிலையில், கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் தடையை தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தடை செய்யப்பட்ட சிற்றம்பல மேடையில் ஏற முயன்ற பெண் ஒருவர் கோயில் நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது சர்ச்சையானது. அந்த பெண் தன்னை ஜாதி ரீதியிலாக தீட்சிதர்கள் அவமானப் படுத்தியதாக புகார் அளித்தார். இதன்பேரில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவும் செய்தனர். இது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது எனக் கூறிய இந்து சமய அறநிலையத்துறை, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான தரிசிக்க அனுமதி அளித்துள்ளது
No comments:
Post a Comment