பெல்லாரி, மே 16- பாகல்கோட்டையில் பெண் வழக்குரைஞர் மேல் கொடூர தாக்குதல் நடத்திய காணொலி சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கருநாடக மாநிலம் பாகல்கோட்டை விநாயக நகரத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. வழக்குரைஞரான இவர் தனது வீட்டின் அருகே சாலையில் சென்று கொண்டிருந் தார். அப்போது அங்கு வந்த மஹாந்தேஷ் என்பவர் திடீரென சங்கீதாவை கொடூரமாக தாக்கி உள்ளார்.
இதில், படுகாயமடைந்த சங்கீதாவை பொதுமக்கள் பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டனர்.
முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மஹாந்தேஷை , ஒரு குற்ற வழக்கில் கைது செய்ய காவல்துறையினர் சென்ற போது அந்த பெண் வழக்கறிஞர், காவல்துறையினருக்கு மஹாந் தேஷ் வீட்டை காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மஹாந்தேஷ், பெண் வழக்குரைஞர் சங்கீதாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மஹாந்தேஷை கைது செய்த காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment