ஹிந்தி மொழித் திணிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்’ - சாலமன் பாப்பையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

ஹிந்தி மொழித் திணிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்’ - சாலமன் பாப்பையா

மதுரை, மே 16- மக்களை மேலும் ஒரு மொழி கற்றுக் கொள்ள திணிப்பது எப்படி நியாயமா கும்? என ஹிந்தி குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வினவி யுள்ளார். பத்ம விருதுகளை மேற்கோள் காட்டி ஹிந்தித் திணிப்பு குறித்து அவர் விவரித்துள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மொழி திணிப்பு குறித்து சாலமன் பாப்பையா கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டதாகவும், தாய்மொழியைக் கற்றுக் கொள்வதோடு ஆங்கிலத்தையும் கற்க வேண்டியிருந்தாகவும் குறிப் பிட்டுள்ளார். மேலும் ஒரு மொழியை கற்க சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு 25 கோடி ரூபாயும், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 600 கோடி ரூபாயும் ஒதுக்கியதை மக்கள் கவனித்து வருவதாகவும், தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல பிற மாநில மக்களும், அவர்களது மொழி நடத்தப்படும் விதத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை சுட்டிக்காட்டி பேசியுள்ள சாலமன் பாப்பையா, பத்ம விருதில் ஒரு வரி கூட தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை என்றும், அனைத்தும் ஹிந்தியிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அதில் தன்னை விமர்சித்து இருந்தால் கூட தமக்கு தெரியாது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். வடமாநிலங்களில் வேலைவாய்ப்பு பெறுகிற வர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம் ஆனால் அனைவரும் படிக்கவேண்டும் கட்டாயம் படிக்க வேண்டும், ஆங்கிலத் திற்கு மாற்று ஹிந்தி என்று கூறுவதை நம் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறினார்

No comments:

Post a Comment