அறிவுசார் சொத்துரிமை: கருப்புப் பட்டியலில் இந்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

அறிவுசார் சொத்துரிமை: கருப்புப் பட்டியலில் இந்தியா

வாசிங்டன், ஏப். 30 அறிவுசார் சொத்துரிமை குறித்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை மோச மானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா.

அறிவுசார் சொத்துரிமை என்பதில் ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை வகைப் படுத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப் பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடி விடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 26ஆம் தேதியன்று உலக அறிவுசார் சொத்துரிமை நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘யு.எஸ். ஸ்பெஷல் - 301’ என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில், ‘அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த கருப்புப் பட்டியலில் உள்ளன.

தற்போது இந்தியாவை முதன்முறையாக அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால், இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், இனி வருங்காலத்தில் இந்தியா மீது அமெரிக்கா அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் கூறுகையில், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில், எங்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்தியா உட்பட 7 நாடுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நாடுகள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 

 அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் முதன்முறையாக இந்தியாவை மோசமான வர்கள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் மதவன்முறைகள். சிறுபான்மையினத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் எளியமக்களின் மீதான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவை மோசமானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment