“புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது’: ஜோ பைடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

“புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது’: ஜோ பைடன்

வாசிங்டன், மார்ச் 30- புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறியதற்கு, தனது தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 34ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.  

இதற்கிடையில், உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பயணம் மேற்கொண்டார். நேட் டோ நாடான போலாந்துக்கு சென்ற ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். 

அப்போது ஜோ பைடன் பேசுகையில்,  இந்த நபர் (ரஷ்ய அதிபர் புதின்) அதிகாரத்தில் நீடிக்க கூடாது. 

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. 

ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி. அவர் பலரை இறக்க மின்றி கொல்பவர். 

நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயற்சிக்கிறார். ஆனால், அவரால் அது முடிய வில்லை. நாம் அனை வரும் ஒன் றாக உறுதுணையாக உள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டது. 

இந்த சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நான் எனது கருத்துகளுக்கு பின்வாங்க வில்லை. நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்க வில்லை. 

அவர் (ரஷ்ய அதிபர் புதின்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது. உங்களுக்குத் தெரியும், கெட்ட வர்கள் தொடர்ந்து கெட்ட செயல் களை செய்யக் கூடாது.” என்று ஜோ பைடன் கூறினார்.

No comments:

Post a Comment