கடுமையான பொருளாதார வீழ்ச்சி குழந்தைகளுடன் தமிழ்நாடு வந்த இலங்கை மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

கடுமையான பொருளாதார வீழ்ச்சி குழந்தைகளுடன் தமிழ்நாடு வந்த இலங்கை மக்கள்

ராமேசுவரம், மார்ச் 23 - இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், படகு மூலம் மீண்டும் அகதிகளாக 2 குடும்பத்தினர் ராமேஸ்வரம் வந்தனர்.

இலங்கையின் பொருளா தாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மலையங் களில் உள்ள தேயிலை தோட் டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும். உலகளாவிய கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப் படைந்தது. இதனால் இலங் கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட துடன் படிப்படியாகப் பொரு ளாதாரப் பின்னடைவையும் சந்திக்கத் துவங்கியது. தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண் ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு முட்டை ரூ.36, தேநீர் ரூ.100, அரிசி ரூ.200, வெங் காயம் 250, கோழி இறைச்சி ரூ.1,000க்கும் விற்கப்படுகிறது.

இலங்கையின பொருளாதார நெருக்கடி எதிரொலி காரணமாக தனுஷ்கோடி அருகே நான்காம் மணல் தீடை பகுதியில் அகதி களாக குழந்தைகளுடன் இரண்டு குடும்பத்தினர்  அதிகாலை படகில் வந்து இறங்கினர்.

நான்காம் மணல் தீடை பகுதியில் அகதிகள் சிலர் வந்தி றங்கி உள்ளதாக அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கட லோர காவல்படையினர் ஹோ வர் கிராஃப்ட் படகின் மூலம் தீடையில் இருந்த 6 பேரையும் மீட்டு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினரின் முகாமிற்கு கொண்டு வந்து கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடலோர காவல்துறையினரின் விசாரணையில் யாழ்ப் பாணத்தை சேர்ந்த கஜேந்திரன் (24) இவர் ஈரோடு மாவட்ட அகதிகள் முகாமிலிருந்து 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு திரும்பியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்நத் மேரி கிளாரி (24)யை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு நிசாந்த் என்ற நான்கு மாத குழந்தை உள்ளது. மேலும் 2016இல் குடி யாத்தம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் சிலாபத்தைத்திற்கு திரும்பியவர் தியோரி (28). கணவர் அவரை கைவிட்ட நிலையில் தனது 9 வயது குழந்தை எஸ்தர், 4 வயது குழந்தை மோசஸ் ஆகி யோருடன் வந்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக குழந் தையின் பால் பவுடர் உள்பட அரிசி, பருப்பு, கோதுமை, பிரட், எரிவாயு, மண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாலும், வேலை வாய்ப்பும் குறைந்துள்ளதால் குழந்தைகள் உயிரையாவது காப் பாற்ற வேண்டும் என்ற எண் ணத்தில் அகதிகளாக மீண்டும் தலைமன்னார் பேசாலையிலி ருந்து கையில் இருந்த பணத்தைக் கொடுத்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், மண்டபம் கடலோர காவல்துறையினர் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment