சென்னை, பிப்.15 எல்.அய்.சி. பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில், “எல்.அய்.சி. நிறுவனம் பல்லாண் டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக் காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார் மயத்தை நோக்கிய - முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும்.
இம்முடிவு மக்களின் நலனையோ எல்.அய்.சி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்ட தன்று என்பது வெள்ளிடைமலை. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக் கூடாது.
முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்று எல்.அய்.சி. நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment