லக்னோ, பிப்.15- வேலையின்மை உள்ளிட்ட பொரு ளாதார விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசு, தனது தோல்விகளை ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்று, உ.பி. மேனாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலை வரு மான மாயாவதி குற்றம் சாட்டி யுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப் பிட்டிருப்பதாவது: வேலையின்மை என்பது தேசியப் பிரச்சினையாக உருவெ டுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஏற்றுக்கொள்ள பாஜக மறுத்து வருகிறது. தங்களுடைய தவறு என்று தெரிந்தும் அதனை ஏற்க மறுத்து தொடாந்து ஆண வப் போக்குடன் அரசு செயல்படுகிறது. வேலையின்மையால் ஏராள மான இளைஞாகள் சமூகத்தில் பல்வேறு அவமரியாதை களையும், பிரச்சினை களையும் எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடன் சுமையால் விவசாயிகள், சிறு தொழில் நடத்துவோர் தற்கொலை செய்து கொள் வதாக வெளியாகும் செய் திகள் மிகுந்த கவலையளிக் கின்றன.
நாட்டில் உள்ள இளைஞர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு பொருளாதார பிரச்சினைகளால் அழுத் தத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், நாடு பொருளா தார ரீதியாக வளாந்து விட்டதாகவும், இந்தியா ஒளிர்வதாகவும் பாஜக பிரச் சாரம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இவ்வாறு மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment