சென்னை, பிப்.22 தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் முகவரிக்கு அனுப்பும் மனுக்கள் மட்டுமே பரி சீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவர் நேற்று (21.2.2022) வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஏற்படுத்தப்பட்டு தற்காலிகமாக எண். 31, செனடாப் 2ஆவது சந்து, தேனாம் பேட்டை, சென்னை-18 என்ற முகவரி யில் உள்ள தாட்கோ அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆணையம் ஆகியவை நீண்ட நாட்கள் டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆணையத்தின் மாநில அலுவலகம் சென்னை, சாஸ்திரிபவனில் செயல் பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த ஆணையங்களுக்கு இடையிலான வேறுபாடு தெரியாமல், மாநில ஆணையத்தின் முகவரியாக சாஸ்திரி பவனை குறிப்பிட்டும், தேசிய ஆணை யத்தின் முகவரியாக தமிழ்நாடு ஆணை யத்தின் முகவரியை குறிப்பிட்டும், மனுக்கள் அனுப்புகிறார்கள். அந்த மனுக்களை பரிசீலனை செய்வதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஆகவே தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணை யத்திற்கு மனு கொடுக்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தங்கள் மனுக்களை அனுப்ப வேண்டும்.
ஒரே மனுவை தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையம் அல்லது தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆணையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஆகிய இரண்டுக்கும் முகவரியிட்டு அனுப்பி வைக்கி றார்கள். இரு ஆணை யத்திற்கும் ஒரு சேர மனு அனுப்புவது மாநில ஆணையம் தன்னுடைய பணியை செய்வதற்கு நடைமுறை சிக் கலை ஏற்படுத்துகிறது.
இதை உணர்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும். சரியான முகவரி குறிப் பிடப்படவில்லை என்றால், அந்த அஞ்சல் பரிசீலனை செய்யப்படாமல் திருப்பி அனுப் பப்படும். மனுக்கள், புகார்களை மாநில ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப் பினர்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்ப கூடாது. ஆணையத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டு ஆணை யத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment