கேரள அரசுப் பேருந்தில் அதிக ஓசையுடன் அலைபேசியில் பேசவும், பாடல் கேட்கவும் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

கேரள அரசுப் பேருந்தில் அதிக ஓசையுடன் அலைபேசியில் பேசவும், பாடல் கேட்கவும் தடை

திருவனந்தபுரம், பிப் 22 ’கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பய ணிகள் யாரும் சத்தமாக அலைபேசியில் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என கேரள அரசு எச்சரித்துள்ளது.

அண்மையில், ஒன்றிய அரசு, ரயில் களில் பயணம் செய்யும் பயணிகள் அலை பேசியில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்திருந்தது.

கேரள அரசு போக்குவரத்து கழகத் திற்கு, கேரளாவில் அரசுப் பேருந்துகளில் அலைபேசியில் சத்தமாகப் பேசுவது, அநாகரீகமான வார்த்தைகளைப் பயன் படுத்துவது, பாடல்கள் அல்லது காணொலிகளைச் சத்தமாகப் பார்ப் பது, போன்ற செயல்களால், பிற பயணி களுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடர்ச் சியாக புகார்கள் வந்தன.

இந்நிலையில்  20.2.2022 அன்று கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள் ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதா வது, ”இனி கேரளாவில், அரசுப் பேருந் துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக அலைபேசியில் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக, இந்த அறிவிப்பினை அனைத்து பேருந்துகளின் தகவல் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்''. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment