தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு விழா

தருமபுரி, ஜன.24 தருமபுரி மாவட் டம் மாட்டியம்பட்டி கிராமத்தில் ஒசூர் மாவட்ட செயலாளர் தலை மையில் பொங்கல் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது.

முதலில் கழகக் கொடியினை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் கழகக் கொடியினை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத் தார். அவ்வூரை சார்ந்த இளை ஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் அனைவருக்குமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பாக பொங்கல் விழா கொண்டபட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்,

கோ. கண்மணி, செயலாளர் கிருபா சின்னசாமி, மாணவர் கழக  அமைப் பாளர் .கா.வெற்றி, ஒசூர் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்

.கா.சித்தாந்தன், வாசு, விசு .தி.மு. மாதையன், அவ்வூரைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment