நன்னிலம், ஜன.24 நன்னிலம் தந்தை பெரியார் படிப்பகம், திராவிடர் கழ கம், பகுத்தறிவாளர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு படிப்பகம் மற்றும் நன்னிலம் தந்தை பெரியார் சிலை வண்ணம் தீட்டப்பட்டு கழகக் கொடி, தோரணம் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவில் நாதசுவர இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. முன்னதாக திருக்கண்டீஸ்வரம் சாமிநாதன் குழுவினரின் நாதசுர இசை மற்றும் மேளதாளத்துடன் கழக தொண்டர்கள், அரசியல் மற்றும் சமூக அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் படிப்பகத்திலி ருந்து ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ஆறுமுகம், நன்னிலம் ஒன்றிய பகுத் தறிவாளர் கழக தலைவர் கரிகாலன், செயலாளர் தன்ராஜ், பெரியார் பிஞ்சு பென் ரிச்சர்ட், நகர தலைவர் தன.சஞ்சீவி, நகர செயலாளர் சரவணன். ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி, ஓவியர் சன்னாநல்லூர் சங்கர், மாண வர் கழக திலீபன், வீரமணி, அச்சுத மங்கலம் பெரியார் பெருந்தொண்டர் கணேசன், வீதிவிடங்கன் கலியபெரு மாள், ஆனைக்குப்பம் ராமசாமி, பெரியார் மெஸ் முருகன், நல்லமாங் குடி சிவபாலன், அருள், விஜி, முடிகொண்டான் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், மூங்கில்குடி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி, நன்னிலம் நகர திமுக செயலாளர் பக்கிரிசாமி, பாவேந்தர் நகர் அன்பழகன், புத்த களுர் ஜோதி, நன்னிலம் செந்தில் குமார், ராமதாஸ், நல்லமாங்குடி சுரேஷ், ஜீவானந்தம், வினோத், ஜெயசீலன், ராகவன், வழக்குரை ஞர்கள் சாந்தபாலன், சரவணன், பெட்ரோல் பங்கு சிங்காரவேலு, ஆசிரியர் இராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த காவாளி இராஜேந்திரன், தூத்துக்குடி ஆலம்நாட், சென்னை ராசி பில்டர்ஸ் பரிமள ரெங்கனாதன், ரோட்டரி அமைப் பைச் சார்ந்த ஜானி, என்.ஆர்.சுப்பிரமணியன், எழில் நகரைச் சார்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட துணை ஆட்சியர் வைத்தியநாதன், பாலன், அஇஅதிமுகவைச் சேர்ந்த அக்ரி நடராஜன், செல்.சரவணன், விடுதலை முகவர் தியாகு, தமிழ்மணி, சென்னை குபேந்திரன், மாரிமுத்து வர்த்தக சங்க தலைவர் பாஸ்கரன் உட்பட ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment