மனோஜிப்பட்டியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

மனோஜிப்பட்டியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

தஞ்சை, ஜன.24 தஞ்சை ஒன்றியம் மனோஜிப்பட்டியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.                               

22.01.2022 மாலை 5 மணிக்கு தஞ்சை ஒன்றியம்  மனோஜிப்பட்டியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் கவி இல்லத்தில் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ.ஏகாம்பரம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா. விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் உழைப்பையும் திராவிடர் கழக பணிகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நீட்,புதிய கல்வி கொள்கை போன்ற கல்வி ரீதியான தொடர் போராட்டங்களையும் திராவிட மாணவர் கழகம் அதற்காகப் போராடி வந்த சூழலியம். ஏன் கருப்பு சட்டை அணியும் என மிக விளக்கமாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

கூட்டத்தின் இறுதியில் மாணவர்கள் திராவிட மாணவர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவோம் என தெரிவித்தார்கள்.

அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்த மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் செ. ஆகாஷை பாராட்டி மகிழ்ந்தோம்.

குறிப்பு: வருகின்ற ஜனவரி 26 நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்கிறோம் என தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment