நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மறைவுற்ற கழகத்தோழர்கள் இல்லங்களில் நலம் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மறைவுற்ற கழகத்தோழர்கள் இல்லங்களில் நலம் விசாரிப்பு

திருவாரூர், ஜன.24  21.01.2022 வெள்ளி அன்று காலை முதல் மாலை வரை நாகை, திருவாரூர்  மாவட்டங்களில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மறைந்த கழகத்தோழர்களின் இல்லங்களில் ஆறுதல் தெரிவித்து விபத்தில் பாதிக்கப்பட்ட தோழர்களை நலம் விசாரித்தார்.

மருங்கூர் வே.இராஜேந்திரனின் படத்திறப்பு

06.01.2022 அன்று மறைந்த நாகை மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்VR என்கிற மருங்கூர் வே.இராஜேந்திரன் (வயது 72) அவர்களின் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் 21.01.2022 வெள்ளி அன்று காலை 11.30க்கு  மருங்கூரில்  திறந்துவைத்தார்.

மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, தி.மு. துளசி செல்வேந்திரன், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இள.மாதவன், ஊராட்சி மன்ற தலைவர் மதிராணிமகேந்திரன், ஆகியோர் இரங்கலுரையாற்றினார்கள்

கழகத்தோழர்கள் ராஜ்மோகன்,தீபன் சக்ரவர்த்தி, காமராஜ், மகேந்திரன், முனுசாமி, மகாலிங்கம், மகன்கள் அறிவுமணி, அஞ்சாநெஞ்சன், மகள்கள் யசோதா சிவக்குமார், கண்மணி பாரதிதாசன், பொன்மணி சதீஸ்குமார். சகோதரர் கண்ணையன் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள், கழகத்தோழர்கள் கலந்துகொண்டனர்

ஏரவாஞ்சேரி இள.மாதவன் இல்லம்

கடந்த 12 ஆண்டுகளாக கண்ணந்தங்குடி மேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி அந்த பள்ளியை ஒரத்தநாடு வட்டாரத்தில் சிறந்த பள்ளியாக தரம் உயர்த்தி கிராம மக்களின் பேரன்பை பெற்று நல்லாசிரியர் விருது பெற்று தற்போது தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு பெற்றுள்ள பகுத்தறிவாளர் இள. மாதவன் அவர்களது  சொந்த ஊரான எரவாஞ்சேரி இல்லத்திற்கு மதியம் 12.30 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்  கழக பொறுப்பாளர்களுடன் சென்றார் அனைவரையும் வரவேற்ற இள. மாதவன் தனது தந்தை ஆசிரியர் இளங்கோவன் நாகையில் பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்றியதை நினைவுகூர்ந்து அந்த வழியில் நானும் பெரியார் சிந்தனையில் பயனிப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்

சோழங்கநல்லூர் சரஸ்வதி இல்லம்

திருவாரூர் மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதியின் அவர்களின் வாழ்விணையர் சீனிவாசன் (வயது 80) 16.11.2021 மறைவுற்றார். அவரது சோழங்கநல்லூர் இல்லத்திற்கு 21.1.2022 மதியம் 1.30 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று அம்மையார் சரஸ்வதி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சோழங்கநல்லூர் இராஜேந்திரன் இல்லம்

திருவாரூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இராஜேந்திரன்.மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி ஆகியோரின் மகன் மகேந்திரன் அண்மையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்கு பின் சோழங்கநல்லூர் இல்லத்தில் ஓய்வில் உள்ளார் 21.01.2022 மதியம் 2 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கழக பொறுப்பாளர்களுடன் சென்று நலம் விசாரித்தார் மகேந்திரன் வாழ்விணையர் அனுசியா, சகோதரி செந்தில்குமாரி உள்ளிட்ட உறவினர்கள் உடனிருந்தனர்.

சோழங்கநல்லூர் தனசேகரன் இல்லம்

26.12.2021 அன்று விபத்தில் மறைவுற்ற கழகத்தோழர் சோழங்கநல்லூர்

மேனாள் வட்டாரத் தலைவர் நல்லமுத்து மகன் தனசேகரன் (வயது 39) இல்லத்திற்கு 21.01.2022 மதியம் 2.30 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று அவரது சகோதரர் பாண்டியன், தாயார் பிச்சையம்மாள் நல்லமுத்து, வாழ்விணையர் சரஸ்வதி, மகள்கள் விகனேஷ், தனுஷ், தினேஷ் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்

வடவோடை சைனம்பு இல்லம்

திருவாரூர் ஒன்றிய மகளிரணி தலைவர் சைனம்பு அவர்களின் வாழ்விணையர் நடேசன் (வயது 80) 17.01.2022 அன்று மறைவுற்றார்கள் 21.01.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில் வடவோடை சைனம்பு இல்லத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் வீ.மோகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன், திருவாரூர் ஒன்றிய கழகத் தலைவர் இராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் , மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் மனோஜ், சோழங்கநல்லூர் கவுதமன், மணிகண்டன், இளங்கோவன், வி.சி. முகாம் பொறுப்பாளர் சரவணதமிழன், உள்ளிட்ட கழகத்தோழர்கள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment