Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒற்றைப் பத்தி - ‘வ.உ.சி. யார்?'
January 25, 2022 • Viduthalai

1908 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சு என்ற பெயரில் வ.உ.சி., சிவா, பத்மநாப அய் யங்கார் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ, 133-ஏ பிரிவுகளின்கீழ் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு, அது ராஜ நிந்தனை சட்டமாக வெள்ளையர் அரசால் மாற்றப்பட்டது.

வ.உ.சி.யின் பொதுக் கூட்ட உரைகள் அனல் கக்கின. நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில்  ‘வந்தே மாதரம்' ஒலி முழக்கம் எங்கும் விண்ணைப்பிளந்தது. பாளையங்கோட்டையில் நடந்து சென்ற ஹார்வி சகோ தரர்கள்மீது சிலர் தாக்குதல் தொடுத்தனர். சுதேசிய உணர்ச்சியின் மிகுதியால் திருநெல்வேலியில் நடை பெற்றுக் கொண்டு இருந்த அய்ரோப்பிய சர்க்கஸ் கம்பெனி பொதுமக்கள் ஆதரவின்மையால் முடங்கியது.

சுதேசி எழுச்சியைக் கண்டு எரிச்சலடைந்த கலெக்டர் வின்ச்  என்பவரால் அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காக வ.உ.சி., சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

மூவரும் காவலில் வைக்கப்பட்டதற்காக நெல்லை மக்கள் கொதித்துக் கிளம்பினர்.

இவர்கள்மீதான வழக் கினை ஆதர் பிரான்சிஸ், பின்ஹே ஆகியோர் விசாரித்தனர்.

வெள்ளைக்கார நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பு இலண் டன் மாநகரம் வரை கடும் கண்டனத்தை எழுப்பச் செய்தது.

வ.உ.சி.க்கு அளிக்கப்பட் டது இரட்டை ஆயுள் தண்டனை - ஆம் நாற்பது ஆண்டுகள்.

கோவையில் இறங்கிய வ.உ.சி. காலிலும், கையிலும் விலங்கும், சங்கிலியும் மாட்டி, போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டார். வெள்ளை சார்ஜண்ட் உருவிய வாளுடன் நடந்து சென்றான். சிறையிலே மாட்டுக்குப் பதிலாக வ.உ.சி. செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

நீதிபதி பின்ஹே எழுதிய தீர்ப்பின் வரிகள் என்ன தெரியுமா?

‘‘சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர்  பிரானது பிரஜைகளில் இருவர்க்கத்தாரிடையே பகைமையையும், வெறுப் பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள்கூட சாவுக்குப்பின் ராஜ துவேஷத்தை ஊட்டும்!'' என்று எழுதினார் என்றால், இந்தச் சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து இந்திய ஒன்றிய அரசின் நிபுணர்கள், ‘வ.உ.சி. யார்? இவரை யாருக்குத் தெரியும்? இவர் ஒரு வணிகர்தானே?' என்று கேட்டனர் என்றால், நாம் இன்னொரு ‘வெள்ளை'யர் ஆட்சியில் வாழ்கிறோமா என்றுதானே நினைக்கத் தோன்றும்!

 - மயிலாடன்

ஆதாரம்: அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்')

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn