ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

தனியார் துறையிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என தெலங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

அய்ஏஎஸ் பணி விதிகளை திருத்தும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் விஜயன் கடிதம்.

தி டெலிகிராப்:

மேற்கு வங்க வரலாற்றை மறைத்திட மோடி அரசு முயல்கிறது, மம்தா குற்றச்சாட்டு.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங் களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்து உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பில், சம்பிரதாயமான மற்றும் அடிப்படையான சமத்துவம் இடையே உள்ள வேறுபாடு குறித்து கூறியவை மிகப் பொருத்தமானது என தலையங்கத்தில் கூறப் பட்டுள்ளது.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment