புதிய கரோனா உருமாற்றம் விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

புதிய கரோனா உருமாற்றம் விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்

சென்னை, நவ.27 புதிய கரோனா உருமாற்றம் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரண மாக கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை, தனி மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நெறி முறைகளை ஒன்றிய அரசு விதித்தி ருந்தது. இந்த கட்டுப்பாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பி.1.1.529 என்று மருத்துவ நிபுணர்களால் அறியப்படும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து சுகா தாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உள்ள தடுப்பூசிகள் இந்த புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண் டிருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் விமானங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித் துள்ளது. இந்தியாவில் தற்போது 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயணக்கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கரோனா உருமாற்றம் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளை, குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து விமான நிலையங் களுக்கும் ஒன்றிய அரசு அறி வுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment