உலக நாடுகளை அலற வைக்கும் புதிய வகை கரோனா...!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

உலக நாடுகளை அலற வைக்கும் புதிய வகை கரோனா...!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடில்லி, நவ.27 உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கரோனா வைரஸ் களில் ஒமைக்ரான் மிகவும் மோசமானது என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்ச ரித்துள்ளனர்.

கரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்த வொரு வைரசும் உருமாறுவது இயல்பு தான், அதற்காக இப்படியா? என்று உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளை அலற வைத்திருக்கிறது புதிதாக தோன்றியுள்ள உருமாறிய வைரஸ்.

அது மட்டுமல்ல, உலக நாடுகளின் பங்குச்சந்தைகளையெல்லாம் ஒரே நாளில் சரிவை சந்திக்க வைத்திருக்கிறது. இந்த புதிய வைரசுக்கு பெயர் ஒமிக்ரான் கரோனா என்பதாகும்.

இந்த வைரசின் தாயகம், தென் ஆப்பிரிக்கா. அங்குதான் முதன்முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டு இருக் கிறது. அதைத்தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித் துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.

இதுவரை உலகமெங்கும் கண்டறியப் பட்டுள்ள கரோனா வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என் கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். நோய் எதிர்ப்புச்சக்தியை தவிர்க்கும் தன்மையை இந்த வைரஸ் கொண்டிருப் பதுதான் மருத்துவ அறிவியல் சமூகத்தை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் வேலை செய்து விடாது. நிச்சயமாக குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித். இது அதிவேகமாக பரவும் என்றும் எச்சரிக்கிறார் இவர்.

இந்த வைரசால் முதலில் விழித்துக் கொண்டுள்ள நாடு இங்கிலாந்து என்று சொல்ல வேண்டும். இங்கிலாந்து சுகாதார முகமையின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ், இதுவரை நாம் பார்த்ததில் கவலை அளிக்கிற வைரஸ் இதுதான். இந்த வைரஸ் முதன்முதலாக காணப் பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் கவு டெங்கில் ஆர் வேல்யூ என்று சொல்லப் படுகிற இதன் பரவல் விகிதம் 2 ஆக உள்ளது. இது உண்மையிலேயே மிகவும் அதிகம் என்றும் இவர் சொல்கிறார்.

இதன் காரணமாக இங்கிலாந்தில் இப்போது வாரத்துக்கு 50 ஆயிரம் வைரஸ் நோயாளிகளை மரபணு வரிசைப்படுத்தி சோதிக்கிறார்கள், இது அதிகபட்ச எண்ணிக்கை என்பதுவும் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தகவல்.

இந்த வைரஸ் பரவல் தடுப்பதற்காக தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசொத்தோ, எஸ் வாத்தினி ஆகிய 6 நாடுகளின் விமானங் களை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி விட்டது.

புதிய உருமாறிய வைரஸ் மிகவும் கவலை அளிக்கிறது, இதனால்தான் தென் ஆப்பிரிக்க நாடுகளின் விமானங் களை தடை செய்திருக்கிறோம் என்று இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந் தைப் போன்று ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள் ளன.

தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து வருகிற விமானங்களை நிறுத்த அய்ரோப்பாவும் விருப்பம் வெளி யிட்டுள்ளது.

இதுபற்றி அய்ரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறும்போது, அய்ரோப்பிய கூட்ட மைப்பின் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து வருகிற விமான பயணங்களை நிறுத்த அவசரகால தடையை செயல்படுத்தலாம் என முன்மொழிகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, விவாதிக்க உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது.  கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ஒமைக் ரான் என்பதை இந்த புதிய வகை கரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள் ளனர். இந்த புதிய வகை கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே புதிய கரோனா பரவி யுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களையும், இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார் படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment