ஈரோடு, அக்.2 1.10.2021 அன்று பெரியார் கொள்கைப் பற்றாளரும், பெரியார் படிப்பக வாசகர் வட்ட புரவலருமான ஈரோடு ப.சம்பத் குமார் தனது 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்,மாவட்ட கழக தலைவர் கு.சிற்றரசு,மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், பேராசிரியர் ப.காளிமுத்து,பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருஷ்ணன், இரா.நற்குணன்,பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், ஈரோடு மண்டல திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, பகுத்தறிவாளர் கழக பொன்முகிலன், சேலம் மாநகர கழக செயலாளர் பா.வைரம், சேலம். ஜெ.கருணாகரன் ஆகியோர் சென்றனர். முன்னதாக பெரியார் மன்றத்தில் கேக் வெட்டி கழக தோழர்களுக்கு சிற்றுண்டி வழங்கி தனது 75ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
No comments:
Post a Comment