லண்டன், அக். 11- இங்கிலாந்து இள வரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது.
ரூ.10 கோடி பரிசு
பூமி எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்கு வோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வரு கிறது.இங்கிலாந்து இளவரசர் வில் லியம் உருவாக்கிய இந்த பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என் றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.10 கோடி) பரி சாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சுற்றுச் சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறு திப் போட்டிக்கு 15 போட்டியா ளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள் ளனர். சீனா, வங்காளதேசம், நைஜீரியா, கோஸ்டாரிக்கா, சுவிட்சர் லாந்து மற்றும் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்த இறுதி பட்டியலை இளவரசர் வில்லியம் கடந்த மாதம் வெளியிட்டார்.
சோலார் இஸ்திரி வண்டி
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து இருவர் இடம்பிடித்து உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வினிஷா உமாசங்கர் (வயது 14) என்ற மாணவி முக்கியமானவர் ஆவார்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 9ஆ-ம் வகுப்பு மாணவியான இவர், சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி உள்ளார். சுமார் ரூ.40 ஆயிரம் செலவில் உருவாக்கி உள்ள இந்த வண்டியால், கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படு கிறது. இந்த வண்டியை உருவாக் கியதன் மூலம் வினிஷா உமாசங்கர் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் ஏராளமான விருது களும், பரிசுகளும் பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக் கான இறுதி போட்டிக்கும் அவர் தேர்வாகி இருப்பது உலக அளவில் இந்தியா மட்டுமின்றி தமிழ்நாட் டுக்கும் பெருமை சேர்க்கும் வகை யில் அமைந்துள்ளது.
டில்லியை சேர்ந்தவரும் பங்கேற்பு
இதைப்போல டில்லியை சேர்ந்த வித்யுத் மோகன் என்பவர் வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் அமைப்பு ஒன்றை உரு வாக்கி உள்ளார். டில்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் வித்யுத் மோகனின் கண்டுபிடிப்பு அமைந் துள்ளது. எனவே அவரது படைப் பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள் ளது.
17ஆம் தேதி இறுதிப் போட்டி
இந்த இறுதிப் போட்டி லண்ட னின் அலெக்சாண்டிரா மாளிகை யில் வருகிற 17ஆம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப் பாளிகளுக்கு பரிசு வழங்கப்படு கிறது. இந்த நிகழ்ச்சியில் வினிஷா உமாசங்கர் மற்றும் வித்யுத் மோகன் இருவரும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை யில் உயர்ந்த கவுரவமாக கருதப் படும் இந்த விருதை வெல்வதற்காக வினிஷா மற்றும் வித்யுத் ஆகியோ ருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
No comments:
Post a Comment