அ.வெ. கயல் சேர்த்த உண்டியல் பெரியார் உலகம் நிதிக்கு அளிப்பு
தி.மு.க. தஞ்சை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி - கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகியோரின் மகள் அ.வெ.கயல் தான் சேர்த்த உண்டியல் தொகையை பெரியார் உலகம் நிதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் (2.10.2021, தஞ்சை),
இரா.கவிமொழி-வசந்தகுமாரின் மகனும், கக்கரை கே.இராமமூர்த்தியின் பெயரனுமாகிய “கவின்” தனது ஒன்றேமுக்கால் வயதில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும், கலாம் உலக சாதனையாளர் புத்தகத்திலும், பல்வேறு நாடுகளின் கொடிகள், விலங்கினங்கள், தேசத் தலைவர்கள், பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், மனித உடற்கூறுகளைக் கூறி இரண்டு சாதனைகள் புரிந்துள்ளார். தனது இரண்டாவது வயதில் கவின் 197 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளப்படுத்தி மூன்றாவது உலக சாதனையாக “ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்தில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இனிய தருணத்தில் “பெரியார் உலகத்திற்கு” 500 ரூபாய் நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர். (2.10.2021)
No comments:
Post a Comment