வடகொரிய அரசில் கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

வடகொரிய அரசில் கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி

பியாங்யாங், அக். 2- வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சிக்கு தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள கிம் ஜாங் அன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் (வயது 34), எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் செல்வாக்கு பெற்று வந்தார். கிம் ஜாங் அன்னின் ஆலோ சகராகவும் விளங்கினார். அது மட்டுமின்றி, அவரது அரசியல் வாரிசாகவும் கருதப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு தென்கொரி யாவின் தேசிய உளவுத்துறை, இவர் இரண்டாம் நிலை தள பதி என மதிப்பிட்டது.

2018-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது அங்கு சென்ற வட கொரிய தூதுக்குழுவில் இவர் வட கொரியாவின் முகமாக விளங் கினார். தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடை பெற்ற பேச்சு வார்த்தையின் போது இவர் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது இவருக்கு வட கொரியா அரசில் மிக முக்கிய மான முடிவு எடுக்கும் அமைப் பான தேச விவகாரங்கள் கமி ஷனில் (எஸ்..சி.) உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதை அந்த நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.. அதிகாரபூர்வமாக தெரிவித் துள்ளது.

இது முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது.

மற்றொரு அதிரடி மாற்றமாக தென் கொரியாவுடன் இணக்க மான உறவை மீண்டும் ஏற் படுத்த வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், தென்கொ ரியாவுடன் மீண்டும் நேரடி தொலைபேசி தொடர்பை ஏற்படுத்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவுறுத்தி உள்ளார்.

இதுபற்றி வடகொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் கூறுகையில், “தென்கொரியா வுடன் மீண்டும் நேரடி தொலைபேசிச்சேவையை (ஹாட்லைன்) மீட்டமைக்க தயார். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவா திக்கவும் தயார். நாட்டின் தலைவர் அறிவுறுத்தி இருப்ப தால் மறு சீரமைப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும்என தெரிவித்தது.

அண்டை நாடான தென் கொரியாவுடன் மீண்டும் இணக் கமான உறவைப் பராமரிக்க விரும்பினாலும் அமெரிக்காவு டனான வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை.

அமெரிக்கா மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்க விரும்பினாலும், வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. வடகொரியா மீதான பகைமை உணர்வு, ராணுவ அச்சுறுத் தல்கள் மாறாதவரையில் தங் கள் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்று வடகொ ரியா கூறுகிறது.

அமெரிக்காவின் பொருளா தார தடைகளும், தென்கொரி யாவுடன் அமெரிக்காவின் கூட்டு போர்ப்பயிற்சியும் தங் கள் நாட்டுக்கு விரோதமான போக்கு என்று வடகொரியா நம்புகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment