தமிழ்நாடு தினம் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

தமிழ்நாடு தினம் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.31 தமிழ்நாடு தினம் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

இதுபற்றி முதல்-அமைச்சர் மு..ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

1956ஆம் ஆண்டு நவம் பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட் டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென் றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போ தைய அரசு அறிவித்திருந் தது.

இந்தநிலையில் பல் வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் தேதி எல்லை போராட் டத்தினை நினைவு கூரும் நாளாகத்தான் அமை யுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக் காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந் ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெய ரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்பு களின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அர சாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லை போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் தேதியை எல்லை போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் 1956ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் அமைக் கப்பட்டபோது தமிழ் நாட்டின் எல்லைகளை காக்கும் போராட்டங் களில் ஈடுபட்டு சிறைச் சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது.

தற்போது எல்லை காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.5,500ஆம் மருத்துவப்படியாக ரூ.500ஆம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லை காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3,000 மருத்து வப்படியாகரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. எல்லை போராட்டங் களில் நேரடியாக ஈடு பட்டு சிறை சென்று தியா கம்செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக் கும் எல்லை காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர் வாக வரும் நவம்பர் 1ஆம் தேதி தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கி றேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment