பா.ஜ.க. கட்சி என்பது கிரிமினல்களின் பாதுகாப்பு அரணா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

பா.ஜ.க. கட்சி என்பது கிரிமினல்களின் பாதுகாப்பு அரணா?

 ‘‘ஊசிமிளகாய்''

- மேற்கண்ட செய்தி இன்றைய நாளேடு ஒன்றில் (‘இந்து தமிழ் திசை', திருச்சி பதிப்பு

பக்கம் 7, 22.7.2021) வெளிவந்துள்ளது.

பா... என்ற கட்சி எப்படி கிரிமினல்களின் பாதுகாப்புக்கான புகலிடமாக உள்ளது என்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இதுபோன்ற இரண்டு, மூன்று செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

வேறு எங்கும் சேர்ந்து எளிதில் பதவியும், பாதுகாப்பும் பெற தமிழ்நாட்டில் அவ்வளவு சுலபமாக முடியாது என்பதால், இந்தப் புகலிடம் - ஒன்றிய அரசு,  அதன் பா... தலைமையைக் காட்டி, அதில் பதுங்கிக் கொள்ளும் வெட்கக்கேடான நிலை!

எனவே, பா...வினர் பலரின் - முக்கிய பொறுப்பாளர்களின் ‘‘பழைய கதையை'' கொஞ்சம் கிளறினால், அவர்கள் இருக்கவேண்டிய இடம் பா...வா அல்லது சிறைச்சாலையா? என்பது விளங்கும்!

மற்ற கட்சிகள் குறிப்பாகத் தி.மு.. போன்றவற்றில் ஒரு சிறு தவறு என்றாலும், பெரிதாகக் காட்டும் நம் ஊடகங்கள், ஏனோ பா... என்றால் வெளிச்சம் காட்டாமல், சந்து பொந்துகளில் மட்டும் -  தவிர்க்க இயலாததால், வெளியிடும்பத்திரிகா தர்மமும்' இங்கு கோலோச்சுகிறது!

காரணம் வெளிப்படை.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சியில் இருந்தாலும் கிரிமினல்களை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கை எடுக்கத் தவறக்கூடாது!

சட்டம் தனது கடமையைச் செய்யவேண்டும். தி.மு..வில் தவறு செய்யும் குற்றவாளிகளை முதலமைச்சர் பாதுகாப்பதில்லையே!

அந்த உணர்வு ஏன் பா...வுக்கு இல்லை என்பது மக்கள் கேள்வி!

No comments:

Post a Comment