2 ஆம் இடம்
உயர்
கல்வி பயிலுவதற்கான சேர்க்கையில் தமிழ் நாடு இரண்டாம் இடத்தில்.
கிருஷ்ணா
நீர்
தமிழ்நாட்டுக்குக்
கிருஷ்ணா நீர் திறக்க ஆந்திர அரசு ஒப்புதல்.
‘கண்டுபிடித்து
விட்டார்!'
‘பாலியல்
கொடுமைகளைத் தடுக்க பெற்றோர் தங்கள் மகள்களுக்கு மொபைல் போன் வாங்கித் தரக் கூடாது!' - உ.பி. மகளிர்
ஆணைய உறுப்பினர் மீனா குமாரி.
விஞ்ஞான
‘அற்புதம்!'
24 ஆயிரம்
ஆண்டுகளுக்குப்பின் பனியில் உறைந்திருந்த ‘ரோட்டிபர்' என்ற மிக நுண்ணிய விலங்கை விஞ்ஞானிகள் உயிர்த்தெழச் செய்து விட்டனர் - ருசியாவில்!
7,500 படுக்கைகள்
சென்னை
மாநகராட்சி எல்லைக்குள் தீவிர கரோனா தடுப்புப் பணிகளால் 7,500 படுக்கைகள் காலியாக உள்ளன.
இப்படியொரு
ஆணை
தடுப்பூசி
பற்றிய இரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாதாம் - மத்திய அரசு ஆணை.
ஓரின
சேர்க்கை
ஓரின
சேர்க்கை திருமணத்துக்கு அமெரிக்காவில் 73% ஆதரவு.
எச்சரிக்கை
இந்திய
ஒன்றியம் முழுவதும் கருப்புப் பூஞ்சை நோய் 150 விழுக்காடு அதிகரிப்பு. 31 ஆயிரம் பேர் பாதிப்பு. உயிரிழப்பு 2109.
முதலமைச்சர்
- பிரதமர் சந்திப்பு!
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் வரும் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்திக்கிறார்.
புகார்
செய்யலாம்
குழந்தைத்
தொழிலாளர்கள் எங்காவது பணி புரிந்தால் தொலைப்பேசி எண் 1098-க்குப் புகார் கொடுக்கலாம்.
ஆக்சிஜன்
62 இரயில்கள்
மூலம் தமிழ்நாட்டில் 4500 டன் ஆக்சிஜன் விநியோகம்.
மீண்டும்
திரிணாமுல்
திரிணாமுல்
காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குச் சென்று, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கப் பட்டு, நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பின ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முகுல்ராய், அவரது மகன் ஆகியோர் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.
மாற்றம்?
மத்திய
அமைச்சரவையில் மாற்றம் வருகிறது.
ஜி-7
நாடுகள்
ஏழை
நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசியை ஜி-7 நாடுகள் நன்கொடையாக வழங்கும்.
எழும்பூர்
எழும்பூர்
தொடர்வண்டி நிலையம் (ரயில்) 113 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
No comments:
Post a Comment