அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீட்டை அகற்ற முயற்சிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 21, 2020

அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீட்டை அகற்ற முயற்சிப்பதா?

டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம்

சென்னை, டிச. 21- தி.மு. பொரு ளாளரும் தி.மு. நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பின ருமான டி.ஆர்.பாலு மத்திய மனித வள அமைச்சர் ரமேஷ் பொக் ரியாலுக்கு நேற்று (19.12.2020) எழுதியுள்ள கடிதத்தில்  குறிப்பிடப் பட்டுள்ளதாவது,

அய்.அய்.டி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணியிட நியமனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதி யினர் மற்றும் அட்டவணை பழங் குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அகற்றிட மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது மிக்க வேதனை அளிக்கிறது.”

அய்.அய்.டி.-யில் இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக நடை முறைபடுத்துவது பற்றி பரிந் துரைகள் செய்வதற்காக அய்.அய்.டி. இயக்குநர் பேராசிரியர் வி.ராம்கோபால் ராவ் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு நிய மிக்கப்பட்டு அந்தக் குழு உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேரா சிரியர்கள், பேராசிரியர்கள் ஆகிய நியமனங்களில் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.

மேலும், (மி) சிறப்புநிலைக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அய்.அய்.டி.யை சேர்க்கவும்; (மிமி)  முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் மட்டுமே இடஒதுக்கீடு பின்பற்றப்படவும்; (மிமிமி) தகுதியுள்ள வர்கள் கிடைக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால், அடுத்த ஆண்டு இடஒதுக்கீட்டைக் கைவிடவும் அந்தக் குழு பரிந் துரைத்துள்ளதாகவும் அறிகிறோம்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் தரமும் தகுதியும் குறைந்து போவதாக குழு அறிக்கையில் மிகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதி யினர் மற்றும் அட்டவணை பழங் குடியினர்பிரிவுகளைச் சேர்ந்த வர்கள் 5 விழுக்காடு உள்ளனர். மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் உயர் சாதியினரே ஆக்கிரமித்துள்ளனர் என்று அரசு புள்ளி விவரங்களிலிருந்து தெரிய வருகிறது. எனவே, அந்தக் குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

அய்.அய்.டி. உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கை நியாயமாகவும் கவன மாகவும் நடைமுறைபடுத்தப்பட வில்லை என்பதை உங்கள் கவ னத்திற்கு கொண்டு வருகிறேன். இந்தக் குறைபாடு இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் நாடாளு மன்றக் குழுவினாலும் மற்றும் நலச் சங்கங்களினாலும் பலமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் நலச்சங்கங்கள் அளித்த வேண்டுகோள்களினாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நாடாளுமன்றக் குழு அளித்த அறிக்கைகளினாலும், மத்திய/மாநில நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஆகிய அனைத்தும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற வேண் டுமென்று 2020 அக்டோபர் 19 ஆம் நாள் பல்கலைக்கழக மானியக் குழு தன்னுடைய கடிதத்தில் அறிவுறுத் தியுள்ளது. ஆனால், பேராசிரியர் ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு எதற்காக நியமிக்கப் பட்டதோ அந்த வேலையைச் செய்யாமல் மிகவும் பிற்போக்குத் தனமான மற்றும் கண்டனத்திற்குரிய வகையில் இடஒதுக்கீட்டு கொள் கையை பின்பற்றுவதற்கு எதிர் மறையான முடிவை எடுத்துள்ளது.

நேரடி நியமனத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகிதம்இடஒதுக்கீடு வழங் கப்படும் என்று இடஒதுக்கீட்டு கொள்கை கொண்டு வந்து 27 ஆண்டுகள் ஆன பின்பும், உயர் கல்வியில் மிக உயர்ந்த பணியிடங்களில் ஒரு சதவிகிதமே பிற் படுத்தப்பட்டோர் உள்ளனர் என்பது வேதனைக்குரியதாகும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது அரசியல மைப்புச் சட்டப் படியான கடமை யாகும். அதிலிருந்து மீறுவது கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பது அனைத்து மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவாக அறி விக்கப்பட வேண்டும்.

எனவே, பேராசிரியர் ராம் கோபால் ராவ் குழு பரிந்துரைகளை இந்திய அரசு முற்றிலுமாக நிரா கரிக்க வேண்டுமென்றும், அய்.அய்.டி. உள்ளிட்ட அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை, தேவையெனில் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் நாடாளு மன்றக் குழு பரிந்துரைத்துள்ளபடி, ஒரு சிறப்புத் தேர்வின் மூலம் நிரப்பிட வேண்டுமென்றும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென்றும் தி.மு. கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தி.மு. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment