எடியூரப்பா கருநாடகத்தை கொத்தடிமை நிலைக்குத் தள்ளுகிறார்: சித்தராமையா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

எடியூரப்பா கருநாடகத்தை கொத்தடிமை நிலைக்குத் தள்ளுகிறார்: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, செப்.29  வேளாண் சட்டங்கள் திருத்தத்தின் மூலம் கருநாடகத்தை கொத் தடிமை நிலைக்கு தள்ளுகிறார் என எடியூரப்பா மீது சித் தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.


கருநாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-


கருநாடக அரசு நில சீர் திருத்த சட்டம் மற்றும் வேளாண்மை சந்தைகள் சட் டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. வேளாண்மை சந்தைகள் சட்டத் திருத்தத் தால் விவசாயிகள் மட்டு மன்றி நுகர்வோரும் பாதிக் கப்படும் நிலை உள்ளது.


விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு விளை பொருட்களை வாங்கி அதை நுகர்வோருக்கு அதிக விலைக்கு தனியார் நிறுவ னங்கள் விற்பனை செய்யும். இதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவார்கள். உழுப வனுக்கே நிலம் என்று தேவ ராஜ் அரஸ் முதலமைச்சராக இருந்தபோதுகாங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந் தது.


இப்போது சிறு விவசாயிகளின் நிலத்தை பறித்து பணக்காரர்களுக்கு கொடுக்க பாரதீய ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. இதில் எந்த கட்சி விவசாயிகளுக்கு ஆதர வாக செயல்படுகிறது?. விவ சாய நிலத்தை யார் வேண் டுமானாலும் வாங்கிக் கொள் ளலாம் என்று கருநாடக அரசு நில சீர்திருத்த சட் டத்தில் திருத்தம் செய்துள் ளது.


இதன் மூலம் பணக்காரர் கள் விவசாய நிலத்தை வாங்கி அதில் தொழிற்சாலை, நிறு வனங்கள் போன்றவற்றை அமைப்பார்கள். இதனால் விவசாயம் நாசமாகிவிடும். நாட்டின் மொத்த விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர்.


இந்த விவசாயிகள் தங்க ளின் நிலத்தை விற்பனை செய்துவிட்டு நகரங்களை நோக்கி வந்து கூலி வேலை தேடுவார்கள். மத்திய அரசு உத்தரவின் பேரில் முதல மைச்சர் எடியூரப்பா இந்த சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.


மத்திய அரசின் தாளத் திற்கு ஏற்ப இவர் ஆடுகிறார். எடியூரப்பா மாநிலத்தை கொத்தடிமை நிலைக்கு தள் ளுகிறார் என்று சித்த ராமையா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment