சென்னை, ஜூலை29, கரோனா தொற்றுகாரணமாக கல்வி நிறுவ னங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இறுதியாண்டு மாணவர் களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தவிர, மற்ற பருவத் (செமஸ்டர்) தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி கடந்த 23ஆம் தேதி அறிவித்தார்.
அப்போது அதில் இதுதொடர்பான விரிவான அறிவிப்பை உயர்கல்வித் துறை அரசாணையாக வெளியிடும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன் படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டு இருந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலாம் மற்றும் 2ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பு, முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதலாம், 2ஆம், 3ஆம் ஆண்டு பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு, பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, முதலாம் மற்றும் 2ஆம்ஆண்டு எம்.சி.ஏ. படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த பருவத்துக்கு (செமஸ்டர்) மட்டும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது.
இந்த மாணவர்களுக்கு சில வழி முறைகளை பின்பற்றி மதிப்பெண் வழங்கப்பட இருக்கிறது. அதாவது சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அக மதிப்பிட்டில் இருந்து 70 சதவீதமும் மதிப்பெண்களை என மொத்தம் 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மை பாடங் களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
துணைப்பாடங்கள் மற்றும் விருப் பப்பாடங்களுக்கு 100 சதவீதம் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப் பெண்கள் அளிக்கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாண வர்கள் இதற்கு முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத் தேர்வுகளை (அரியர்) பின்னர் எழுத வேண்டும்.
தொலைதூரக் கல்வியை பொறுத்த வரையில் மேற்கண்ட நடைமுறை பின் பற்றப்படும். தொலைதூரக்கல்வியில் எங்கெல்லாம் அகமதிப்பீடு இல் லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கு பெற்று அவர்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளலாம். கரோனா தொற்றால் உள்ள கடினமான சூழ் நிலையை கருத்தில்கொண்டு மதிப் பெண்கள் குறைவாக உள்ள மாணவர் களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment