கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த டில்லி அரசு மருத்துவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த டில்லி அரசு மருத்துவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டில்லி, ஜூன் 30- டில்லியில் கரோனா வைரஸுக்கு எதி ரான போரில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்து வமனையின் மூத்த மருத்துவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப் படும் என்று முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் அறிவித் துள்ளார்.


கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டில்லி 2-ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை டில்லியில் கரோனா வைரஸ் பாதிப்பால் 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


டில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைச் சமாளிக்க லோக்நாயக் ஜெயப் பிரகாஷ் அரசு மருத்துவ மனை கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பே முழுமையான கரோனா சிகிச்சை மருத்துவ மனையாக மாற்றப்பட்டது. அந்த மருத்துவமனையில் மயக்கமருந்துப் பிரிவில் மூத்த மருத்துவராக இருந்தவர் அசீம் குப்தா (வயது 52).


தற்போது டில்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலை யில், நோயாளிகளுக்குச் சிகிச் சையளிப்பதில் தீவிரமாக மருத்துவர் குப்தா பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன் உடல்நலம் பாதிக் கப்பட்ட குப்தாவுக்குப் பரி சோதனை நடத்தப்பட்டதில் அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து அவரின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது. இதில் குப்தாவின் மனைவி உடல் நலம் தேறினார். ஆனால், குப்தா உடல்நிலை மோசம டைந்து தெற்கு டில்லியில் உள்ள சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந் தார். அவரின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.


மருத்துவர் குப்தாவின் மறைவுக்கு முதல்வர் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்


டில்லி முதல்வர் கெஜ்ரிவால் காணொலி மூலம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “எல்என்ஜே மருத்துவமனை யின் மூத்த மருத்துவர் அசீம் குப்தா மறைவு வேதனையைத் தருகிறது. கடந்த சில மாதங் களாக அய்சியு பிரிவிலிருந்து நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றினார். அவரின் அயராத பணி குறித்து சக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.


குப்தாவின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டி ருந்தாலும் அவர் நல்வாய்ப் பாக குணமடைந்தார். மருத் துவர் குப்தா போன்ற மனிதர் களால்தான் ஊக்கம் பெற்று மற்றவர்கள் கரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நமக் கெல்லாம் மிகப்பெரிய உந்து சக்தியாக குப்தா இருந்து வரு கிறார், அவரின் உத்வேகத்துக் கும், மனிதநேயச் சேவைக்கும் தலைவணங்குகிறேன். டில்லி அரசு ஏற்கெனவே அறிவித் தது போல் குப்தாவின் குடும் பத்தாருக்கு ரூ.1 கோடி இழப் பீடு வழங்கப்படும்.


விலை மதிக்கமுடியாத உயிருக்கு இந்தப் பணம் சிறிய தொகைதான். தேசத்தின் சார்பில், டில்லி மக்களின் சார்பில், டில்லி அரசு குப்தா குடும்பத்தாருக்கு இந்தப் பணத்தை வழங்கும்” எனத் தெரிவித்தார்.


டில்லி துணை நிலை ஆளு நர் அனில் பைஜால் சுட்டுரை யில் பதிவிட்ட இரங்கல் குறிப் பில், “எல்என்ஜேபி மருத்துவ மனையின் மூத்த மருத்துவர் அசீம் குப்தா மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன். கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியில் இருந்துபோராடி உயிர் நீத்த வீரர். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தி னருக்கு இரங்கல் தெரிவிக்கி றேன்” எனத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment