இந்தியா கூட்டணி வெல்லவேண்டும் ஏன்? காரைக்குடியில் பரப்புரைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

இந்தியா கூட்டணி வெல்லவேண்டும் ஏன்? காரைக்குடியில் பரப்புரைக் கூட்டம்

featured image

காரைக்குடி மார்ச் 22- காரைக்குடி கழக மாவட்டம் சார்பில் அய்ந்து விளக்கு பகுதியில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? என்ற பொருளில் தெரு முழக்கப் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமை வகித்தார்.
மாவட்ட கழக செயலாளர் கல்லூர் சி.செல்வமணி வரவேற் புரை நிகழ்த்திட மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட கழக துணை செயலாளர் இ.ப.பழனி வேலு ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.

பின்னர் கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா தொடக்கவுரையாற்றினார். அவர் தனது உரையில் தேர்தல் அரசிய லில் பங்கேற்காத திராவிடர் கழகம் தான் முதன் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையினை தொடங்கி உள்ளது. அந் தளவிற்கு இந்த நாடும் நாட்டு மக் களும் கொதி நிலையில் வாழ்ந்து வருவதையும் அதற்கு தீர்வு காணவே இந்த தேர்தலை வாக்கா ளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

நிறைவாக கழக சொற்பொழி வாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசை இதுவரை ஒன்பது முறை உச்சநீதிமன்றம் கண்டித்து தீர்ப்பு வழங்கியுள்ளதையும் அதற்கான ஆதார விளக்கங்களையும் அடுக்க டுக்காக எடுத்து வைத்து பேசினார்.
இந்த பரப்புரை கூட்டத்தில் மாநில தகவல் தொழில் நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், தி.தொ.ச. மாவட்ட தலைவர் சி.சூரியமூர்த்தி, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் வீ.பாலு, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, மாவட்ட ப.க.செயலாளர் ந.செல் வராசன், மாவட்ட ப.க அமைப் பாளர் துரை.செல்வம் முடியரசன், தேவகோட்டை நகர தலைவர் வீர. முருகப்பன், தேவகோட்டை ஒன் றிய அமைப்பாளர் வாரியன்வயல் சோசப், மாவட்ட ப.க.எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் ந.குமரன் தாஸ், தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ.தில்லைராசா, நகர கழக அமைப்பாளர் ஆ.பாலகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்குடி நகர தலைவர் ந.செக தீசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment