இலங்கை சிறையில் அவதிப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

இலங்கை சிறையில் அவதிப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

featured image

சென்னை,மார்ச் 23 – தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21.-3.-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடு வித்திடவும், அவர் களுக்குத் தேவை யான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு நேற்று (22.-3.-2024) கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப் படுவது ஆழ்ந்த வேதனையை அளிப் பதாகவும், கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீன வர்கள் தொடர்ந்து கைது செய்யப் படுவது, அவர்களது குடும்பத்தினரி டையேயும், மீனவ சமூகத்தினரி டையேயும் பெருத்த மன உளைச் சலையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனை யோடு குறிப்பிட்டுள்ள முதல்-அமைச் சர், 21-.3.-2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதையும், அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள் ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய் யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப் பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள முதல்-அமைச்சர், இலங்கை நீதி மன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித் திடவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், இலங்கைச் சிறைகளில் வாடும் மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்திடவும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment