'நீட்' தேர்வு அச்சம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

'நீட்' தேர்வு அச்சம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

அரியலூர், மார்ச்.23- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50), விவசாயி. இவருடைய மகன் கபிலன் (17). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிளஸ்-2 தேர்வை கபிலன் ஆர்வமுடன் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த கபிலன் தனது தந்தையிடம் மருத்துவம் படிக்க விரும் புவதாக தெரிவித்துள்ளார். எனவே ‘நீட்’ தேர்வுக்கு தனியார் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து படிக்க உங்களால் பணம் கட்ட முடியுமா? என்று கேட்டுள்ளார். அவரும் தன்னால் முடிந்த வரை செலவு செய்வதாக கூறியுள்ளார். இதனால் ‘நீட்’ தேர் வுக்கு தனியார் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து படிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கபிலன் கடந்த சில நாட்க ளாக சோகமாக இருந்துள்ளார்.
தேர்வுக்கு தனியாக படிக்கப்போவதாக கூறிய கபிலன், தனது அறையின் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

No comments:

Post a Comment