குண்டுவெடிப்பு : தமிழர்களைத் தொடர்புபடுத்துவதா? முதலமைச்சர் கண்டனம்! ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

குண்டுவெடிப்பு : தமிழர்களைத் தொடர்புபடுத்துவதா? முதலமைச்சர் கண்டனம்! ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு!

featured image

பெங்களூரு,மார்ச் 20- பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு நிகழ்வில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததையடுத்து ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கருநாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிர பல உணவகம் ஒன்று செயல் பட்டு வருகி றது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர் பாராத வேளை யில் அடுத்தடுத்து இரண்டு முறை அடை யாளம் தெரியாத பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத் தின் முதற்கட்ட விசாரணையில், இது சமையல் எரிவாயு வெடிப்பு இல்லை என் பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவி யல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேக ரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட் டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் நிகழ்வு பெங்களூர் நகரத் தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதி களில் பல முக்கிய இடங் களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டது. சம்பந் தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே உணவகத் திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தன. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (ழி.மி.கி.) மாற்றப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு நிகழ்வு தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந் தார். இது தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி எனப் பல் வேறு தரப்பினரும் தங்களது கண்டனங் களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய இணை அமைச் சர் ஷோபா கரந்தலஜே பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர் மன் னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட் டுள்ள பதிவில், “என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகளை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துக்கள் சிலருக்கு வலியை ஏற்படுத்தி யதை நான் உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த எவருக்கும், என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்” எனக் குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment