அந்தோ பரிதாபம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

அந்தோ பரிதாபம்

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா படங்களை போட்டு
தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜ.க.

புதுச்சேரி, மார்ச் 3- கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா. ஜனதா கூட்டணி வைத்து போட் டியிட்டது. தற்போது இதில் விரி சல் ஏற்பட்ட நிலையில் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா. ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.
இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.- ஜெய லலிதா படத்துடன் பல இடங் களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ள னர். இந்த சுவரொட்டிகள் சமூக வலைதளத்திலும் வெளிவந்து உள்ளது. அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ‘தரமான கல்வி, சுகா தாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்’ என்றும், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ்நாட் டிற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதா அவர் கள்தான். அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்’ என்றும், ‘புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சுவரொட்டிகளில் பிரத மர் மோடி, முதலமைச்சர் ரங்க சாமி, உள்துறை அமைச்ச அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப் பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வ கணபதி எம்.பி., உள்துறை அமைச் சர் நமச்சிவாயம், மேனாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகி யோரது படங்களும் இடம்பெற்று உள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இது போன்ற நடவடிக்கையில் புதுச் சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடு பட்டுள்ளதாக அரசியல் நோக் கர்கள் கருதுகிறார்கள். கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங் களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment