ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு

featured image

சென்னை,ஜன.31- ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங் களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு மற்றும் ஆக்சியானா நிறு வனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் குறித்தும் தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது,
தமிழ்நாட்டில் தொழில் முத லீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட் டிற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29.1.2024 அன்று தொழில் முத லீட்டு மாநாட்டில் கலந்துரையாடி னார்கள்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (30.1.2024) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் களை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீ டுகள் செய்திட வலியுறுத்தினார்கள்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மேட்டோ (Mr. Rafael Mateo) அவர்களும், மானுல் மன்ஜோன் வில்டா (Mr. Manuel Manjón Vilda), CEO -, சிணிளி – நீர்த்துறை (Water Division) அவர்களும் தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களை சந்தித்து பேசி னார்கள்.
இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல் பட்டு வருவது குறித்தும், புதுப்பிக் கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல் படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் பன்னாட்டு அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் அவர்கள் விரிவாக விளக்கினார்கள். இந்த கலந்தாலோசனையில் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் பன்னாட்டு இயக்குநர் கர்லோஸ் வெலாஸ்குயிஸ் (Mr.Carlos Velazquez) அவர்களும் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் அவர்களும், தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.
இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், இராணிப் பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக் கத்தையும் புதிய தொழில் அலகு களையும் தமிழ்நாட்டில் அமைத் திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். தொழில்துறை அமைச்சர் அவர் களும் இத்துறையில் முதலீடு செய் வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதக மான சூழல் பற்றி விளக்கினார்கள்.
ரூ.400 கோடி முதலீடு
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவி டவும், இராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற் சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந் துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உரு வாகும். இச்சந்திப்புகளின்போது, கைடன்ஸ் நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலு வலர் வே.விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் உடனி ருந்தார். இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டு ஆலோசனைகளை மேற் கொள்ள உள்ளார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment