போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு ஏற்பாடு

featured image

சென்னை,ஜன.28 -தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும் பும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் நாட் டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யங்களால் கட்டண மில்லா பயிற்சி வகுப்புகள் நடத் தப்படுகின்றன.

அதாவது, சென்னை பழைய வண்ணை நகரில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப் பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக் கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங் கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாதகாலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும் பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்ப தோடு, 2024ஆம் ஆண்டு ஜன.-1ஆம் தேதி 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக ஜன.29ஆம் தேதிமுதல் பிப்.12ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துதெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

10ஆம் வகுப்பில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் நடைமுறை படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர் வர்களின் விவரங்கள் மேற்குறிப் பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
மார்ச் மாதமுதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment