
புதுடில்லி,ஜன.31- இந்தியா வில் புதிதாக 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை 1,415 ஆக உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வரு கிறது. அதன்படி, நேற்று (30.1.2024) 112 பேருக்கு கரோனா பாதித்த நிலையில், கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண் ணிக்கை 4,50,25,312 ஆக உயர்ந் துள்ளது. நாடு முழுவதும் கரோ னாவுக்கு சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கை 1,415 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்தியாவில் கரோனா வுக்கு பலியானோர் எண் ணிக்கை 5,33,445 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 169 பேர் குணமடைந்த நிலை யில், இதுவரை மொத்தம் 4,44,90,452 பேர் நோய்த் தொற் றில் இருந்து குணமடைந் துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன் றிய சுகாதாரத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment