நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

நடக்க இருப்பவை

 16.9.2023 சனிக்கிழமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கருத்தரங்கம்

தென்காசி: காலை 10 மணி * இடம்: எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி கலையரங்கம் * தலைப்பு: திராவிடர் இயக்கமும் சமூக நீதியும் * தலைமை: வழக்குரைஞர் ராஜா ஈஸ்வரன் (சங்கை சட்டமன்ற உறுப்பினர்) * முன்னிலை: எஸ்.தங்கப்பழம் (நிறுவனர், எஸ்.டி. கல்விக் குழுமம்), எஸ்.டி.முருகேசன் (செயலாளர், எஸ்.டி.கல்விக் குழுமம்), யு.எஸ்.டி.சீனிவாசன் (திமுக), சி.ராஜலட்சுமி (முதல்வர், எஸ்.டி. சட்டக்கல்லூரி) * வரவேற்புரை: வழக்குரைஞர் எஸ்.பிச்சையா (மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர்) * தொகுப்புரை: வழக்குரைஞர் எம்.முத்துராமலிங்கம் (மாவட்ட வழக்குரை ஞர் அணி தலைவர்) * வாழ்த்துரை: வழக்குரைஞர் பொன்.முத்தையாப்பாண்டியன் (வாசு ஒன்றிய பெருந் தலைவர்), கோ.பூசைப்பாண்டியன் (வாசு தெற்கு ஒன்றிய செயலாளர்), ரூபி பாலசுப்பிரமணியன் (வாசு பேரூர் செயலாளர்), வழக்குரைஞர் எம்.பி.கே.மருதப்பன் (மேனாள் வழக்கு ரைஞர் அணி அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் யெலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.இராமலிங்கம் (முதல்வர், எஸ்.தங்கப்பழம் வேளாண் மைக் கல்லூரி)

திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 

திருத்துறைப்பூண்டி: மாலை 4:00 மணி * இடம்: பி. எஸ் ஆர் இல்லம் (மாடியில்) செங்கமலத்தெரு, திருத்துறைப் பூண்டி  * தலைமை: அஜெ.உமாநாத் (மாவட்ட இளைஞரணி துணை தலைவர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர்  * “அறிவுலக ஆசான்” தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகரில் பெரியார் பட ஊர்வலம் மற்றும் சமூகநீதி பாதுகாப்புப் பேரணி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற உள்ளது. அது சம்மந்தமாக அனைத்துக் கட்சி தோழர்களுக்கும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள் * இவண்: இளைஞரணி ஒன்றிய, நகர திராவிடர் கழகம், திருத்துறைப் பூண்டி - திருவாரூர் மாவட்டம்.

17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 

செப். 17 திராவிடர் கழக கொடியேற்று விழா

வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) தலைமையில் கீழ்க்கண்ட இடங்களில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றியும், இனிப்பு வழங்கியும் அனைத்துக் கட்சி தலைவர்கள், தோழர்கள் பங்கேற்க வேண்டுகிறோம்.  

காலை 8 மணி - ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகர், காலை 8.10 - சுந்தரம் பெயிண்ட்ஸ் அருகில், காலை 8.25 - புதிய பேருந்து நிலையம், 8.30 - மன்னர் சரபோஜி கல்லூரி அருகில், காலை 8.35 - புலவர் சாமிநாதன் இல்லம், 8.40 - பெரியார் சமூக தொடர்கல்வி கல்லூரி. 8.45 - ஆர்.ஆர்.நகர், காலை 9 மணி - புதிய வீட்டு வசதி வாரியம்,  காலை 9.10 - பூபதி நினைவு பெரியார் படிப்பகம், காலை 9.20 - குழந்தை இயேசு கோவில் எதிரில், காலை 9.30 - இரயில் நிலையம் அருகில், காலை 10 மணி - பழைய பேருந்து நிலையம், காலை 10.30 - ஜெபமாலைபுரம், காலை 10.40 - வலம்புரி, காலை 10.50 - கரந்தை (சு.முருகேசன் இல்லம்), காலை 11.00 மணி - பெரியார் இல்லம், கீழராஜ வீதி, காலை 11.15 - கீழஅலங்கம், மாவட்டத் தலைவர் இல்லம், காலை 11.30 - தொல்காப்பியர் சதுக்கம், நண்பகல் 12.15 - அண்ணா நகர் (நாஞ்சிக்கோட்டை சாலை), நண்பகல் 12.30 - பார்வதி நகர் (நாஞ்சிக்கோட்டை சாலை), பகல் 1 மணி - விளார் (பழக்கடை பெ.கணேசன் இல்லம்) * இவண்: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்

மேலமெஞ்ஞானபுரம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

மேலமெஞ்ஞானபுரம்: மாலை 7.30 மணி * இடம்: பகுத்தறிவுத் திடல், மேலமெஞ்ஞானபுரம் * தலைமை: க.தங்கராஜ் (ப.க. தலைவர்) * தொகுப்புரை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) * முன்னிலை: கி.சேகர் பொன் ராஜ் (ப.க. கழக செயலாளர்), செ.முருகன் (ப.க. அமைப் பாளர்), சீ.தங்கதுரை (ஒருங்கிணைப்பாளர், ப.க.), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழக தலைவர்), மு.இராமசாமி (நகர கழக தலைவர்), மருத்துவர் டே.சா. அன்பரசன், மருத்து வர் செ.கவுதமி தமிழரசன் (மாவட்ட ப.க. மருத்துவரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், மேல மெஞ்ஞானபுரம்.

காஞ்சி தமிழ் மன்றம் சார்பில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி * இடம்: காஞ்சிபுரம் வையாவூர் சாலை, எச்.ªஸ்.அவென்யூ பூங்கா * வரவேற் புரை: ஆசிரியர் ர.உஷா * தலைமை: முனைவர் பா.கதிர வன் (அமைப்பாளர், காஞ்சி தமிழ் மன்றம்) * முன்னிலை: எம்.பாஸ்கரன், கி.புகழேந்தி, நாத்திகம் நாகராசன், எழுச்சிப் பாடகர் உலகஒளி * கவியரங்கம்: தந்தை பெரியார் - கவிஞர் அமுதகீதன், அறிஞர் அண்ணா - கவிஞர் நரேந் திரன், முத்தமிழறிஞர் கலைஞர் - கவிஞர் மு.தேவேந்திரன் * உரையரங்கம்: தந்தை பெரியார் - வழக்குரைஞர் ஆர்.அப்துல்ஹக்கீம், அ.வெ.முரளி, அறிஞர் அண்ணா - வழக்குரைஞர் பூ.இராஜி, முத்தமிழறிஞர் கலைஞர் - மருத்துவர் மு.ஆறுமுகம், கலைஞர்களின் கருத்துரை : விருப்பமுடையோர் இருவர் * நன்றியுரை: உ.க.அறிவரசி.

17.09.2023, 24.09.2023

தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - கொடியேற்றி இனிப்பு வழங்குதல் - ஆவடி மாவட்டம்

17.09.2023 அன்று காலை 6:30 மணிக்குத் தொடங்கி, 25 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி விட்டு,  பெரியார் திடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

24.09.2023 அன்று காலை 7 மணிக்குத் தொடங்கி 36 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி  பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும்.

தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப் பாளர்) * க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்) கி. ஏழு மலை (விழாக்குழு தலைவர்) * மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொள்வர்.

தருமபுரி  கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 

தருமபுரி: பிற்பகல் 2.00 மணி * இடம்: பெரியார் மன்றம் தர்மபுரி * தலைமை: நளினி கதிர் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: கா.கவிதா (மகளிர் பாசறை தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: கே.ஆ.சி.சின்னத் தம்பி (கழக காப்பாளர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப் பாளர்), ஊமை ஜெயராமன்  (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: காமலாபுரம் சி.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி செயலாளர்) * வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றி உரை: பெ.கோகிலா (மகளிர் பாசறை செயலாளர்) * அழைப்பு: தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றும்  திராவிட மகளிர் பாசறை.

ஆந்திர மாநிலத்தில் 

தந்தை பெரியாரின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்

விசாகப்பட்டிணம்: காலை 9 மணி * இடம்: பெரியார் சிலை, ஒய்.எம்.சி. எதிரில், ஆர்.கே.கடற்கரை, விசாகப் பட்டினம் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இந்திய நாத்திக சங்கம் (ªத்திஸ்ட் சொசைட்டி ஆப் இந்தியா) 

தந்தை பெரியார் பிறந்த நாள் 

சமூக நீதி நாள் பேரணி

தஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்: இரயில் நிலையம் அருகில், தஞ்சாவூர் * காலை 10.30 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), முனைவர் க.அன் பழகன் (மாநில கிராம பிரச்சார செயலாளர்), ச.சித்தார்ததன் (மாநில கலைத்துறை செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப் பிரிவுத் தலைவர், இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டி யன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்), பேரணி யைத் தொடங்கி வைப்பவர்: துரை.சந்திரசேகரன் (மத்திய மாவட்ட செயலாளர், திமுக) * பங்கேற்பாளர்: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), டாக்டர் து.கிருஷ்ண சாமி (காங்கிரஸ்), டி.கே.ஜி.நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர் திமுக), பி.ஜி.இராசேந்திரன் (காங்கிரஸ்), சி.இறைவன் (திமுக), து.செல்வம் (திமுக), சண்.இராமநாதன் (தஞ்சை மேயர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சை) * ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.


No comments:

Post a Comment