பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம்!
பெரியாரின் கனவு நிறைவேற்றம்!
சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது!
‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில் வரவேற்பு!
பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமிக்கப் பட்ட தன் மூலம் பெரியார் கண்ட கனவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்று ‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து 26.09.2023 தேதி ‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் இப்போது 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இது மட்டு மல்லாமல் தற்போது 10 கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், பாசுரங்கள் பாட 10 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகரா கலாம் திட்டத்தின்கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்ததையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பெண்கள் விமா னத்தை இயக்கினாலும், விண் வெளிக்கே சென்று வந்தாலும், அவர்கள் நுழைய முடியாத இடங்களாக கோவில் கருவறைகள் இருந்தன.
பெண் கடவுளர்களுக்கான கோவில் களிலும் இதேநிலை இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியவில்லையே என பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை,நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்” என்று பெருமையோடு கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவில் களும், எண்ணற்ற கிராம கோவில்களும் உள்ளன.
அங்கு பூஜைகள், அபிஷேகம் செய்ய பூசாரிகள், குருக்கள், ஓதுவார்கள், அர்ச்ச கர்கள் இருப்பார்கள். மூலவர் இருக்கும் கருவறைக்குள் அவர்கள் மட்டுமே செல்ல முடியும். இதுவரையில் அர்ச்சகர்கள், ஓதுவார்களெல்லாம் ஆண்களாகவே இருந் தார்கள். அதுபோல சில குறிப்பிட்ட ஜாதி யினர் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற நிலை காலகாலமாக இருந்தது. தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்று, தான் உயிரோடு இருக்கும் வரை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இதற்காக பல போராட்டங்களை நடத்தியதுடன், பல மாநாடுகளிலும் தீர்மான மாக கொண்டுவந்தார்.
இந்த நிலையில், கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், இதற்கான சட்டத்தை நிறை வேற்றினாலும், அந்த சட்டம் உச்சநீதி மன்றத்தில் சாதகமான பதில் கிடைக்காமல் முடக்கப்பட்டது.
மீண்டும் சட்டப் போராட்டங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியிலும் நடந்தன. பெரியார் மறைந்தபோது, கலைஞர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த முடி யாத நிலையை குறிப்பிட்டு, “தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற் றாமல், அவரை புதைத்து விட்டோம்” என்று வருத்தத்துடன் கூறினார்.
அனைவருடைய கனவும் இப்போது முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நனவாகி விட்டது. தமிழ்நாட்டில் இப்போது 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கூடங்கள் இருக் கின்றன.
இதுமட்டுமல்லாமல், தற்போது 10 கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், பாசுரங்கள் பாட 10 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 கோவில்களிலும் இப்போது இந்த பெண் ஓதுவார்கள் பாடும் இறைபக்தி பாடல்கள் இனிமையாக கேட்கின்றன.
மேலும், சிறீரங்கம் ரங்கநாதசாமி கோவில் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிக் கூடத்தில் படித்த தாழ்த்தப்பட்ட சமுதா யத்தை சேர்ந்தபட்டதாரி பெண்கள் என்.ரஞ்சிதா, எச்.ரம்யா, சி.கிருஷ்ணவேணி ஆகியோருக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
இவர்கள் பணி அனுபவம் பெற்று தங்களை செம்மைப்படுத்திக்கொள்ளும் வகையில், மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண் டுக்கு அனுபவம் பெற, மாத ஊக்கத் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அவர்கள் கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிய உள்ளார்கள்.
இந்த ஆண்டும் அர்ச்சகர் பயிற்சியில் 15 பெண்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அனைத்து ஜாதியினரையும் தாண்டி, இப்போது பெண்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம் பெரியார் கண்ட கனவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியு ள்ளார்.
அம்மன் கோவில்கள், தெய்வங்களுக்கு பூஜை செய்ய பெண் அர்ச்சகர்கள் இல்லையே, தேவாரம், திருவாசகம் பாட பெண் ஓதுவார்கள் இல்லையே என்ற குறை இப்போது தமிழ்நாட்டில் நீங்கிவிட்டது. சமூகநீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment