அயன்புரம் அசோக் குமாரின் தாயார் கி.ஈஸ்வரி அம்மையார் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

அயன்புரம் அசோக் குமாரின் தாயார் கி.ஈஸ்வரி அம்மையார் மறைவு

புரசைப் பகுதி திமுகவின் மேனாள் துணைச் செயலா ளர் மறைந்த மு.கிருட்டிணமூர்த்தியின் வாழ்விணையரும், மறைவுற்ற அயன்புரம் பகுதி கழகத் தோழர் கி.அசோக் குமாரின் தாயாருமான கி.ஈஸ்வரி (வயது 88) அம்மையார் 12.8.2023, மதியம் 12.30 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டி யன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், அமைப்பாளர் சி.பாசுகர், தென் சென்னை மாவட்ட துணை அமைப்பாளர் சா.தாமோதரன், அயன்புரம் துரைராசு, மங்களபுரம் பா.பார்த்திபன் மற்றும் கழகத் தோழர்கள் மறைவுற்ற அம் மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று (13.8.2023) பகல் 12 மணிக்கு வேலங்காடு இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.


No comments:

Post a Comment