பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள்

 நாடாளுமன்றத்தில் து.இரவிக்குமார் கேள்வி

புதுடில்லி,ஆக.5- தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என ஒன்றிய இணை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி தெரிவித்துள்ளார். மக்களவையில்   விழுப்புரம் மக் களவை உறுப்பினர் து.இரவிக் குமார் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறாக பதிலளித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி உறுப்பினரான து.இரவிக்குமார் எழுப்பிய கேள்வி யில், ’2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப் புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனும திக்கப்பட்ட பள்ளி ஆசிரி யர்களின் மொத்த எண்ணிக்கை என்ன?

இதே ஆண்டுகளில் நிரப்பப் பட்ட 1- முதல் 8 வகுப்புகளுக்கான ஆசிரி யர்களுக்கான மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கவும். 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான  1 முதல் 8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரி யர் காலியிடங்களின் எண்ணிக் கையும், இவை நிரப்பாததற்கான காரணங்களை வழங்குக’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அளித்த எழுத்துபூர்வ பதிலில், 2022-_2023 ஆம் கல்வி யாண்டில் தமிழ்நாட்டில் ஒப் பளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணி இடங்கள் 1,44,968 எனவும் அதில் 1,43,215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, 2021-_2022 ஆம் ஆண்டில் பணி இடங்கள் 1,45,016, நிரப்பப்பட்டவை 1,39,182, காலியாக இருந்தவை 5,834 என்றிருந்தது. இதற்கும் முன்பான 2021 ஆம் ஆண்டில் 1,47,943 பணி இடங்களும் இதில் நிரப்பப் பட் டவை 1,45,551 மற்றும் காலியாக இருந்தவை 2,362 இருந்துள்ளது. எனினும், பாஜக ஆளும் மாநிலங் களில் தமிழ்நாட்டைவிட   அதிக எண்ணிக்கையில் 1 முதல் 8 வகுப் புகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. 2022-_2023 ஆம் ஆண்டில், குஜராத் தில் 19,963, மத்தியப் பிரதேசத்தில் 69,667, உத்தரப் பிரதேசத்தில் 1,26,028 இடங்களும் நிரப்பப் படாமல் காலியாக உள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 1,87,209 ஆசிரி யர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி யூனியன் பிரதே சத்தில் 949 இடங்கள் காலியாக உள்ளன.மேகாலயா, நாகாலாந்து மற்றும் ஒடிசா மாநிலங்களில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங் களாக 1 முதல் 8 க்கான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றுகூடக் காலியாக இல்லை. டில்லியில் இந்த எண் ணிக்கை கடந்த கல்வி யாண்டில் வெறும் 4 என உள்ளது.

மாநில அரசுகளின் நிர்வாகத்தில்...

இதற்கானக் காரணங்களாக ஒன்றிய இணை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி தனது பதிலில் குறிப்பிடுகையில், 

‘கல்வி என்பது ஒன்றிய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பள்ளிகள் அதன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு களின் நிர்வாகத்தில் உள்ளன. இவர்களின் அதிகாரத்தில், காலி யாகும் இடங்களை நிரப்புவதும் இடம் பெற்றுள்ளன. எனினும், காலியாகும் பணியிடங்களை நிரப் புவது என்பது ஒரு தொடர்ச்சியான முறையாக உள்ளது. இவை, ஓய்வு பெற்றவர்கள், பல்வேறு காரணங் களுக்காகப் பணியை பதவி வில கியவர்கள் மற்றும் பணியிடங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை பொறுத்து நிரப்பப் படுகின்றன. அந்த அரசுகள், இப் பணியை அவ்வப்போது முடிந்தவரை செய்து வருகின்றன. 

எனினும், ஒன்றிய அரசின் நிர்வாகத்திலுள்ள கேந்திரியா வித் தியாலயா பள்ளிகளின் ஆசிரியர் கள் பணியிடங்கள் நிலையை குறித்து இணை அமைச் சர் தனது பதிலில் குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை.

No comments:

Post a Comment