அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ”தமிழ்நாடு நாள்” கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ”தமிழ்நாடு நாள்” கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி

பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

தருமபுரி, ஜூலை 7- தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களால் தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே ”தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பின்படி, தமிழ்வளர்ச் சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும்   உள்ள  பள்ளி மாணவர்களுக்குக்  கட்டுரை  மற் றும்  பேச்சுப்போட்டிகள்  மாவட்ட  அளவில்  நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப் பெற உள்ளன.

இதன்படி, தருமபுரி மாவட்டத் தில் 2023-2024ஆம் ஆண்டு  தமிழ் நாடு நாள் விழாவினையொட்டி கட்டுரை மற்றும்   பேச்சுப்போட்டி கள் அதியமான்  அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு  11.7.2023 அன்று முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிக ளில் அனைத்துப்  பள்ளிகளிலும்  6 ஆம் வகுப்பு  முதல்  12  ஆம்  வகுப்பு  வரை பயிலும்  மாணவ/ மாணவிகள் மட்டும் கலந்து கொள் ளலாம். 

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்குரிய தலைப்புகள் பின்வருமாறு :

கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு

தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு

தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்

மாவட்ட அளவில் கட்டுரை மற்றும்  பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும்  மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000/-,  இரண் டாம் பரிசாக ரூ.7000/-,  மூன்றாம் பரிசாக ரூ.5000/- வழங்கப்படுகிறது.

இது தொடர்பில் கீழ்நிலையில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவில் போட் டியில் பங்கேற்க கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகளில்  ஒவ்வொரு போட்டிக்கும் 60 மாணாக்கர்கள் வீதம் பங்குபெறும் வகையில்  முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில்  பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறது. -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment