மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருப்பத்தூர், ஜூன் 7- திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 4.6.2023 அன்று சாம நகர் - பெரியார் இல்லத்தில்  மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில்  ஜூன் - 4இல் பிறந்த நாள் கண்ட  திருப்பத்தூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் கே. சி. எழிலரசனுக்கு கழக தோழர் கள் அனைவரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித் தனர். மேலும்  இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.திருப்பத்தூர் மாவட்ட ஒன்றியங்களில் தந்தை பெரியார் பெயரில்  கைபந்து போட்டிகள் நடத்துவது என் றும் , முதலில்  கந்திலி ஒன்றியம் நக்கிநாயக்கன்பட்டியில் நடத் துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

2.அனைத்து ஒன்றியங்களில் மூட பழக்கங்களை போக்கும் வகையில்   பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன் வரவேற்றார். மாநில மகளிரணி பொருளார் எ.அகிலா, நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் வி.ழி.அன்பழ கன்  ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவா ளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் சிறப்பு ரையாற்றினர்.

இதில் கழகத் தோழர்கள்  மாநில இளைஞரணி துணை செயலாளர் சி. ஏ .சிற்றரசன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர்  நாகராசன், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா. பாண்டியன், மாவட்ட பகுத்தறிவாளர் ஆசிரியர் தலைவர் கோ. திருப் பதி, சுந்தரம்பள்ளி ஊராட்சி கழக தலைவர் மா.சங்கர், கிருஷ் ணகிரி மாவட்ட மகளிரணி தலைவர் இந்திராகாந்தி,  மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் விஜயா அன்பழ கன், மாவட்ட மகளிரணி தலை வர் ரா.கற்பகவள்ளி, மாவட்ட பாசறை  செயலாளர் சபரிதா, மகளிரணி பொறுப்பாளர்  மணிமொழி, நகர அமைப்பா ளர்  கா.முருகன்,  சோலை யார்பேட்டை நகர செயலாளர் லட்சுமணன்,  கந்திலி ஒன்றிய அமைப்பாளர்  சரவணன், அகரம் மற்றும் நக்கினாம்பட் டியை சார்ந்த கைப்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இறுதியாக மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் சி.  தமிழ்ச் செல்வன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment